உண்மையின் உறைவிடம்…

admin

Thiruma Greets abinesh | தங்கம் வென்ற அபினேஷ்

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகத்தில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபினேஷை சந்தித்து விசிக தலைவர் வாழ்த்து தெரிவித்தார். அவரை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத் தொகையாக 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார், அவரது பயிற்சியாளர் புவியரசிற்கு 10 ஆயிரம் ரூபாயை வழங்கி சிறப்பித்தார். மேன்மேலும் இந்தியாவிற்கு பெருமை […]

chennai Commissioner office | குறை தீர் முகாம்

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 20 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .அருண், காவல் ஆணையரகத்தில் புகார் மனு […]

Minister sivashankar byte | உடனடியாக நடவடிக்கை..!

ஆர்கே நகர், ராயபுரம், பெரம்பூர் தொகுதிகளில் மின்வாரிய பொறியாளர்கள் பற்றாக்குறை, கேபிள் பிரச்சனைகள் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் பேட்டி யளித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி மற்றும் 3 தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் மின்வாரிய பொறியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3 தொகுதிகளில் இருக்கும் […]

Erode cooperative bank | தலைமறைவான டிரைவர்

8.25 கிலோ நகை கையாடல் விவகாரத்தில் நெஞ்சுவலி என நாடகமாடிய ஈரோடு கூட்டுறவு நகர வங்கி மேலாளர் தலைமறைவான டிரைவர் சிக்கினார். ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி செயல்படுகிறது. இங்கு வாடிக்கையாளர் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் தணிக்கையில் 8.25 கிலோ தங்க நகை கையாடல் செய்யப்பட்டது உறுதியானது.இது தொடர்பாக விசாரணை தொடங்கியதும் வங்கி நகை மதிப்பீட்டாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஈரோடு […]

Cooperative bank issue | நகையை மீட்க நடவடிக்கை

ஈரோட்டில் கூட்டுறவு வங்கியில் 60 பவுன் நகை கையாடல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், முனிசிபல் காலனியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்கள் பலர் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று உள்ளனர். இந்த நகைகளின் இருப்பு தொடர்பாக வங்கியின் அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது 60 பவுன் நகை கையாடல் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கியின் இயக்குனர் ஜெயந்தி ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். […]

Tamilnadu fishermen welfare | இடித்து தள்ளப்பட்ட கூடாரம்

பனையூர் குப்பத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்த வலை பின்னும் கூடாரத்தை இடித்து தள்ளியதற்கு மீனவர் சங்கத்தின் சென்னை புறநகர் மாவட்டம் சார்பாக நன்றி தெரிவித்தனர்.. தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் திரு துரை மகேந்திரன் அவர்களின் ஆலோசனையின் படி அமைப்பு செயலாளர் பனையூர் பெ. மூர்த்தி அவர்களின் தலைமையில் சென்னை மாநகராட்சியின் 197 வது வட்ட உறுப்பினர் திருமிகு மேனகா சங்கர் அவர்களை சந்தித்து பனையூர் குப்பத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்த வலை […]

Coimbatore accident | மதுபோதையில் இளைஞர்கள்

கோவையில் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக வாட்டர் வாஷ் செய்வதற்காக வந்த காரை எடுத்துக்கொண்டு மதுபோதையில் பயணித்த நண்பர்கள் கார் மரத்தில் மோதியதில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திதுள்ளது. தஞ்சையை சேர்ந்த ஹரீஷ்,பிரகாஷ் மற்றும் திருச்சியை சேர்ந்த சபா ஆகிய மூவரும் கோவை பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள தனியார் வாட்டர்வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.அவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பலகலைக்கழகத்தில் தோட்டக்கலைத்துறை மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களான தஞ்சையை சேர்ந்த பிரபாகரன் மற்றும்அரியலூரை சேர்ந்த அகத்தியன் ஆகியோரும் நண்பர்களாக […]

Trichy prison dead | திருச்சி மத்திய சிறை

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார். இவருக்கு வயது 19. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. தகவலறிந்து உடனடியாக சென்ற சிறை காவலர்கள் சுபினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Ranipet trade fair | தொழில் வர்த்தகக் கண்காட்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்,கைத்தறி மற்றும் துணிநூல் துறைஅமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ராணிப்பேட்டை சிப்காட் Premier Leather நிறுவன வளாகத்தில் ராணிப்பேட்டைமாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை(Industrial Expo) தொடங்கி வைத்தார்கள். உடன் […]

ADMK EPS Condemns | எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று தமிழகத்தில் அந்த வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய […]

Pak officer waved TN | வேவு பார்த்த பாகிஸ்தான்

தமிழகத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கின் முக்கிய திருப்பமாக, தமிழக சிறப்பு நீதிமன்றம் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்னாள் துணை தூதர் அமீர் சுபைல் சித்திக் என்பவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் அக்டோபர் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாகிஸ்தான் உளவு செயல்பாடுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணை, நாடு முழுவதும் […]

Thiruvallur crime news | மனைவி நடத்தையில் சந்தேகம்

டிரம்மில் மனைவி உடல்…ஷாக் கொடுத்த கணவன் கும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடித்து கொலை செய்து டிரம்மில் அடைத்து மண்ணில் புதைப்பு. இரண்டு மாதங்களுக்கு முன் மனைவியை கொலை செய்து புதைத்ததாக கூறிய கணவன் கைது. சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய காவல்துறையினர் தீவிரம். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் 39. பெயிண்டிங் உள்ளிட்ட கூலி தொழில் செய்து வந்த சிலம்பரசனுக்கும் பிரியா என்பவருக்கும் […]

Chennai Fake beggers | பீதியில் பொதுமக்கள்

தமிழகத்தில், குறிப்பாக தலைநகர் சென்னையில், யாசகம் கேட்பவர்கள் (பிச்சைக்காரர்கள்) — குடும்பத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், வறுமையின் பிடியில் சிக்கியவர்கள் உள்ளிட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு அரசு காப்பகங்களை கட்டி இருக்கிறது. யாசகர்கள் இல்லாத நகரமாக சென்னையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், குடும்பத்தால் கைவிடப்பட்டு தனியாக வாழும் முதியவர்கள் மற்றும் ஆதரவில்லாதவர்கள், யாசகம் கேட்டு தங்களது பசியை போக்கி வருகின்றனர்.ஆனால் தற்போது சென்னையில் யாசகம் கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

ECR New plan | ஈசிஆரின் புதிய அடையாளம்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் அனைத்து மக்களும் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் அனைத்து மக்களும் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட மாபெரும் பேருந்து நிலையம், தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், […]

Brain Eating Amoeba | மூளையை தின்னும் அமீபா

நேக்லிரிய பௌலிரி எனும் அமீபா (ஒரு செல் உயிரினத்தின் வகை) வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவையாகும். உலகெங்கிலும் உள்ள ஏரி, ஆறு, பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும் ஒரு உயிரியை அமீபா என அழைக்கிறோம். இதுபோன்ற இடங்களில் மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாகச் சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கிறது. அமீபா மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இந்த தொற்று ஏற்பட்ட நபருக்குக் காய்ச்சல் […]

TN Assembly Election | 2026 சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தங்களுடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.ஆளுங்கட்சியான திமுக, கரூரில் முப்பெரும் விழா மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்பாகவே தனது சுற்று பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது பிரச்சார பயணங்களை துவக்கியுள்ளனர். கடந்த ஆண்டு புதியதாக கட்சி தொடங்கிய நடிகர் […]

TN Alcohol misuse | அஞ்சும் தமிழக காவல்துறை

பொதுவாக திமுக ஆட்சி காலங்களில் காவல் துறையில் செயல்பாடு சற்று மந்தமாகவும், அதிமுக ஆட்சி காலங்களில் காவல்துறையின் செயல்பாடு அதிரடியாகவும் இருக்கும் என்பது ஒரு மரபாகவே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் காவல் துறையின் செயல்பாடு அதிரடியாகவே இருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மந்தமாக தொடங்கிய காவல் துறையின் செயல்பாடு தற்போது முழுவதும் மந்த நிலையில் உள்ளது. காவல்துறை அதனுடைய காக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது என முதல்வர் […]

Tamilnadu hindu religious | பாஜகவை மிஞ்சும் அறநிலையத்துறை

கடந்த 2014 முதல் இந்தியாவை ஆண்டு வரும் பாஜக, ஒரு மதவாத கட்சி என்றே பார்க்கப்படுகிறது. பாஜகவின் செயல்பாடு இந்துக்களுக்கு ஆதரவாகவும், மற்ற மதத்தினருக்கு எதிராக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் பாஜகவின் அரசியல் செயல்பாடு ஏற்று கொள்ளப்பட்டாலும் திராவிட கட்சிகள் ஆளும் தமிழகத்தில் பாஜகவின் இந்துத்துவா என்ற திட்டம் இதுவரை ஏற்று கொள்ளப்படவில்லை. இந்துக்களுக்காக மட்டுமே பாஜக செயல்பட்டு வருகிறது என்ற நிலை இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவை மிஞ்சும் அளவிற்கு தமிழ்நாடு இந்து […]

chess Championship 2026 | 2026 உலக செஸ் சாம்பியன்ஷிப்

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை இதுவரை திவ்யா தேஷ்முக மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் பெற்றிருந்த நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி மூன்றாவதாக தகுதி பெற்றுள்ளார்.உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற மகளிர் கிராண்ட் சுவிஸ் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்றதன் மூலம், மூன்றாவது இந்தியராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் பிரிவின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் 24 வயதான செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, சீனாவைச் […]

TTV Dinakaran’s Plan | தேசிய ஜனநயாக கூட்டணிக்கு ஆதரவா? இல்லையா?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளரான டிடிவி தினகரன் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார். தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அவர் அதே கூட்டணியில் இருக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்காக பணியாற்றுவோம் என பாஜகவிடம் உறுதி கொடுத்து பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அதிமுகவில் இருந்து 5 ஆவது […]

Anesthesia in Tamilnadu | மயக்க மருந்தில் அதிர்ச்சி

உலகம் முழுவதும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது நோயாளிகளுக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இந்த மயக்க மருந்தை எந்த சிகிச்சையின் போது எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். ஏனெனில் சிலருக்கு முழு மயக்கத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும், சிலருக்கு அரை மயக்கத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும், மயக்க மருந்து பயன்படுத்துவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் மயக்க மருந்து பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்தும் […]

Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன்

Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன் சிறப்பு வாய்ந்த சூரசம்ஹாரம் கும்பாபிஷேகத்திற்கு பிறகு திருச்செந்தூரில் நடைபெறும் முதல் சூரசம்ஹாரம்“ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்” அறுபடை வீட்டின் நாயகனான முருக பெருமான் அருள்கிடைத்தால் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி என பல கோடி பக்தர்கள் தமிழ் கடவுளான முருக பெருமானை வழிபட்டு வருகின்றனர். தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு பல்வேறு இடங்களில் கோயில்களும், அந்த கோயில்களுக்கு என்று தனிக்கதை இருந்தாலும் முருக பெருமான் என்றாலே அனைவரின் […]

Thakkaar book launch | உள்ளதை உள்ளபடி

ஒருங்கிணைந்த குடும்ப உறவுகளின் குரலாக ஒலிக்க தொடங்கிய தக்கார்…! சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தக்கார் குரல் மாத இதழ் வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தி நாளான கடந்த 2 ஆம் தேதி நேற்று முன்தினம் நடைபெற்றது. தக்கார் குரலின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான யூசுப் பாஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பா.ஜோதிமணி, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் துணை ஆட்சியர் டீ.முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ம.வீ.ராஜதுரை, சென்னை பத்திரிக்கையாளர் […]

India Squad Announced | இந்திய அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாததால் ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் விளையாடிய […]

venezuela earth quake | சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 6.2ஆக பதிவாகியுள்ளது. 7.8 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அங்கிருந்த மக்கள் உடனே வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் […]

PM modi speaks about GST | ஜிஎஸ்டி யில் அடுத்த மாற்றம்

ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்கள் மேலும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் […]

Postal Vote counting process | தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை

தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் எண்ணப்படும் முறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் அனைத்துச் சுற்றுகளும் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி: வாக்குப்பதிவு இயந்திரத்தின் இறுதிக்கு இரண்டு சுற்றுகளுக்கு முன்பாக, அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு தொகுதியில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை இருந்தால், […]

Agri bussiness Festival | வேளாண் வணிக திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிகத் திருவிழாவை நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரித்தல், கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள், உற்பத்தியாளர்கள்- வணிகர்கள் சந்திப்பு போன்ற பல்வேறு அம்சங்களுடன், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டின் 2-வது […]

ttv dinakaran cant accept | திட்டவட்டமாக தெரிவித்த டிடிவி

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன், “அரசியலில் இருப்பதால் அரசியல் மட்டும்தான் பேச வேண்டும் என்று அவசியமில்லை. நண்பர்கள் என்ற முறையில் அண்ணாமலையுடன் ஒரு மணி நேரம் பேசினேன்.அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோதுதான் எங்களை கூட்டணிக்கு கொண்டு வந்தார். தில்லியில் நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை. அண்ணாமலை மூலமாகதான் கூட்டணியில் இணைந்தோம். கூட்டணி விட்டு விலகிய பிறகும் அவரிடம் பேசிக் […]

Ladakh Statehood protest | லடாக்கில் வெடித்த வன்முறை

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 4 பேர் பலியாகினர். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சியை வழங்கும் 6வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து […]

Tamilisai Strongly Criticizes | திருமாவளவன் துணை முதல்வர்-ஆ?

திருமாவளவனுக்கு 6 மாதமாவது துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதியை உண்மையாகவே ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால், இந்த ஆட்சியில் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்-அமைச்சர் பதவியை திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும். ஜிஎஸ்டியால் பொருட்களின் விலை குறையுதே.. மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்களே என சந்தோஷப்படாமல், அய்யய்யோ விலை குறைஞ்சிடுச்சு.. மக்கள் இனிமேல் பாஜகவிற்கோ அதிமுகவிற்கோ ஓட்டு போட்ருவாங்களோ என இந்தியா கூட்டணியினர் […]

Tamilnadu Heavy rain | தமிழகத்துக்கு வரும் கனமழை

தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனிடையே, இன்று […]

Westbengal Heavy rain

மேற்குவங்கத்தை புரட்டி போட்ட கனமழை..! ஸ்கூல் லீவு..! மேற்குவங்கத்தை புரட்டி போட்ட கனமழை..! ஸ்கூல் லீவு..!

71st national film award

71வது தேசிய திரைப்பட விருதுகள்..! 3 விருதை தட்டிய தமிழ்ப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 23) டெல்லி விக்யான் பவனில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு […]

Gold Rate Rises

உச்சம் தொட்ட தங்கம் விலை..! ஒரு சவரன் ரூ..? தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது. நேற்று மட்டும் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது நகை பிரியர்களை அதிர வைத்தது. நேற்று தங்கம் விலை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு […]

Annamalai Supports Vijay

விஜய்க்கு சப்போர்ட் பண்ண அண்ணாமலை..! முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன்என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அத்தனை கோடி முதலீடு, இத்தனை கோடி முதலீடு என்று கூறுவதாகவும், ஆனால் இது உண்மையில் வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த முதலீடு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கானதா அல்லது தனிப்பட்ட குடும்ப முதலீடா என மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லுமாறு முதலமைச்சரை கேட்டார். இதற்கு, திமுக அமைச்சர்கள் கடுமையாக […]

eps condemns mkstalin

என்ன சொல்லப்போறீங்க முதல்வரே – இபிஎஸ் அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு இடையே கூட இணக்கமான சூழலை அமைத்திட முடியாத அரசாக இன்றைய திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு விடுதியில் ஒரு […]

Vadivelu fires youtubers

Youtubers-க்கு ஆப்பு அடிக்கணும் – வடிவேலு ஒரு 10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். அதை நடிகர் சங்கம் தடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69ஆவது பொதுக்குழு கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 21) நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசுகையில், ” நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக்கொண்டு நமது […]

Gavaskar blasts pakistan

பாகிஸ்தான் மேல நடவடிக்கை எடுங்க – கோபப்பட்ட கவாஸ்..! மீடியா சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மேலும் இந்த ஆட்டம் துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இரு அணிகளின் கேப்டன்கள் அல்லது பயிற்சியாளர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டிக்கான […]

PM Modi Speaks essentials

பிரதமர் மோடி சொன்ன குட் நியூஸ்..! நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது . வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு […]

dindugal ganja sale

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது திண்டுக்கல்லில் தொடர்ந்து இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசாரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கஞ்சா விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் துணை காவல் ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் காரமடை மருத்துவர் பூங்கா பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Pazhani Mahalaya amavasai

மஹாளய அமாவாசை – புனித நீராடும் நதியின் அவல நிலை மஹாளய அமாவாசையை முன்னிட்டு பழனியில் தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் ஆற்றங்கரை சுகாதாரமற்று இருந்ததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்வது வழக்கம். அதிலும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவதை மக்கள் ஐதீகமாக கொண்டுள்ளனர். அதிலும் புராட்டசி அமாவாசை என்றால் கூடுதல் சிறப்பு உண்டு. அந்த வகையில் இன்று […]

Karur Money Theft

கார நிப்பாட்டு..! பணத்த எடு – சட்டுன்னு சிக்கிய திருடர்கள் வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி – திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது,மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன்(37), தவமணி(27), சத்யராஜ்(27) புதுக்கோட்டையை சேர்ந்த […]

MA.Su speaks about vijay

எழுதி கொடுத்து பேசும் விஜய் – மா.சு நறுக் தவெக தலைவர் விஜயின் பேச்சு யாரோ எழுதி கொடுத்து படிப்பது போல் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஜமீன் தண்டத்தில் ” நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ” முகாமினை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாகை மருத்துவமனையில் பிரசவத்திற்கு மருத்துவர்கள் இல்லை என்று சொல்வது யாரோ எழுதிக் கொடுத்துப் படிப்பது போல் உள்ளது என்று […]

CM MK Stalin about students

ஒரு ஃப்ரண்டா இருங்க – முக ஸ்டாலின் மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, முடிவுற்ற பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்து, புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” […]

Vijay Latest Speech |மோடி ஜி வந்தா பண்ணுவீங்களா? – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்டம் வாரியாக தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளார். கடந்த வாரம், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த நிலையில், இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பேசினார். நாகப்பட்டினம் அண்ணா சிலை அருகே விஜய் பேசினார். இதில் பேசிய விஜய் , எல்லாருக்கும் வணக்கம், இப்ப நான் எந்த மண்ணில் நிற்கிறேன் தொியுமா. நாகூர் ஆண்டவர்கள் அன்போட, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியுடன், கடல் தாய் மடியில் இருக்கும் […]
error: Content is protected !!