manjummal boys director | பாலியல் குற்றச்சாட்டு
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ். பொதுவாலுக்கு எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எலம்குளம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளார்.
டைரக்டர் சிதம்பரம், தனது பிளாட்டில் புகுந்து பாலியல் நோக்கத்துடன் தவறாக நடந்து கொண்டதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் டைரக்டர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.சி. பிரிவு 74 மற்றும் 75-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் டைரக்டர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றும் எர்ணாகுளம் தெற்கு போலீசார் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால் கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ். பொதுவாலுக்கு எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.
