உண்மையின் உறைவிடம்…

opposition party protest | பெயரை மாற்ற எதிர்ப்பு

100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்குவதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்’ (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் இதற்கான நிதியை பாஜக விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாநிலங்கள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் 125 நாள் வேலைத்திட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவின் படி வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்படும். குறிப்பாக மத்திய அரசின் பங்களிப்பு 100%ல் இருந்து 60% ஆக குறைக்கப்படும். இதனால் மாநிலங்களுக்கு நிதி சுமை ஏற்படும்.
இதற்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவை பிற்பகல் 2 மணிவரைக்கும் ஒத்தவைக்கப்பட்டது.
இதனையடுத்து, பாராளுமன்ற வளாகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Total Page Visits: 156 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!