PM Modi Speaks essentials
பிரதமர் மோடி சொன்ன குட் நியூஸ்..!
நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது . வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்.
ஜிஎஸ்டியில் 6 சதவீதம், 18 சதவீதம் வரி வரம்புகள் மட்டுமே பெரும்பாலான பொருள்கள் மீது விதிக்கப்படும். சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99 சதவீதம் பொருட்களின் வரி 5 சதவீதத்தின் கீழ் வந்துள்ளது. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும். ஏழைகள், நடுத்தர வர்த்தகத்தினர்,வரி 5 சதவீதத்தின் கீழ் வந்துள்ளது. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும் என கூறினார்.
