Tamilnadu assemble date | கவர்னர் உரை நிகழ்த்துகிறார்
2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன. 20-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
“2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார். நாங்கள் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். கவர்னர் சட்டசபையின் மாண்பை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். தமிழ்நாடு சட்டசபை கூட்டம் மரபுகளுடன் நடைபெறும் என்றார்.
கவர்னர் உரையை தொடர்ந்து கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும் என்றார்.
Total Page Visits: 147 - Today Page Visits: 1
