உண்மையின் உறைவிடம்…

dhoni traffic violation | தோனிக்கு அபராதம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1 ஆம் தேதி, கான்கே ரிங் சாலையில் பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் அருகே அவரது சொகுசு கார் அதிவேகத்தில் சென்றதை அங்குள்ள தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்ததையடுத்து, மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 183-ன் கீழ் அவருக்கு டிஜிட்டல் முறையில் ‘இ-சலான்’அனுப்பப்பட்டுள்ளதுஇந்தக் கண்காணிப்பு அமைப்பு நகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் ரிங் ரோடு (வட்டச் சாலை) பகுதிகளில் 24/7 செயல்பாட்டில் உள்ளது என்றும், இது அதிவேகம், சிக்னலை மீறுதல் மற்றும் பிற போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து வருகிறது என்றும் ராஞ்சி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார். இத்தகைய விதிகளை மீறும் யாராக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Total Page Visits: 100 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!