Gas cylinder stopped | பாரத் பெட்ரோலியம் விளக்கம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்துள்ள செய்திகளுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்துள்ளது.
வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தில் தற்போது எந்த சிக்கலும் இல்லை என்றும், போதிய இருப்பு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சிலிண்டர் பதிவு செய்வதற்கான கால இடைவெளி மட்டும் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
Total Page Visits: 98 - Today Page Visits: 3
