உண்மையின் உறைவிடம்…

டுடே டிரெண்டிங்248 Videos

Pazhani Mahalaya amavasai

மஹாளய அமாவாசை – புனித நீராடும் நதியின் அவல நிலை மஹாளய அமாவாசையை முன்னிட்டு பழனியில் தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் ஆற்றங்கரை சுகாதாரமற்று இருந்ததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்வது வழக்கம். அதிலும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவதை மக்கள் ஐதீகமாக கொண்டுள்ளனர். அதிலும் புராட்டசி அமாவாசை என்றால் கூடுதல் சிறப்பு உண்டு. அந்த வகையில் இன்று […]

dindugal ganja sale

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது திண்டுக்கல்லில் தொடர்ந்து இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசாரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கஞ்சா விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் துணை காவல் ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் காரமடை மருத்துவர் பூங்கா பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

PM Modi Speaks essentials

பிரதமர் மோடி சொன்ன குட் நியூஸ்..! நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது . வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு […]

Gavaskar blasts pakistan

பாகிஸ்தான் மேல நடவடிக்கை எடுங்க – கோபப்பட்ட கவாஸ்..! மீடியா சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மேலும் இந்த ஆட்டம் துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இரு அணிகளின் கேப்டன்கள் அல்லது பயிற்சியாளர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டிக்கான […]

Vadivelu fires youtubers

Youtubers-க்கு ஆப்பு அடிக்கணும் – வடிவேலு ஒரு 10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். அதை நடிகர் சங்கம் தடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69ஆவது பொதுக்குழு கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 21) நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசுகையில், ” நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக்கொண்டு நமது […]

eps condemns mkstalin

என்ன சொல்லப்போறீங்க முதல்வரே – இபிஎஸ் அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு இடையே கூட இணக்கமான சூழலை அமைத்திட முடியாத அரசாக இன்றைய திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு விடுதியில் ஒரு […]

Annamalai Supports Vijay

விஜய்க்கு சப்போர்ட் பண்ண அண்ணாமலை..! முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன்என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அத்தனை கோடி முதலீடு, இத்தனை கோடி முதலீடு என்று கூறுவதாகவும், ஆனால் இது உண்மையில் வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த முதலீடு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கானதா அல்லது தனிப்பட்ட குடும்ப முதலீடா என மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லுமாறு முதலமைச்சரை கேட்டார். இதற்கு, திமுக அமைச்சர்கள் கடுமையாக […]

Gold Rate Rises

உச்சம் தொட்ட தங்கம் விலை..! ஒரு சவரன் ரூ..? தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது. நேற்று மட்டும் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது நகை பிரியர்களை அதிர வைத்தது. நேற்று தங்கம் விலை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு […]

71st national film award

71வது தேசிய திரைப்பட விருதுகள்..! 3 விருதை தட்டிய தமிழ்ப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 23) டெல்லி விக்யான் பவனில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு […]

Tamilnadu Heavy rain | தமிழகத்துக்கு வரும் கனமழை

தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனிடையே, இன்று […]

Ladakh Statehood protest | லடாக்கில் வெடித்த வன்முறை

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 4 பேர் பலியாகினர். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சியை வழங்கும் 6வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து […]

Postal Vote counting process | தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை

தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் எண்ணப்படும் முறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் அனைத்துச் சுற்றுகளும் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி: வாக்குப்பதிவு இயந்திரத்தின் இறுதிக்கு இரண்டு சுற்றுகளுக்கு முன்பாக, அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு தொகுதியில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை இருந்தால், […]

PM modi speaks about GST | ஜிஎஸ்டி யில் அடுத்த மாற்றம்

ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்கள் மேலும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் […]

Thakkaar book launch | உள்ளதை உள்ளபடி

ஒருங்கிணைந்த குடும்ப உறவுகளின் குரலாக ஒலிக்க தொடங்கிய தக்கார்…! சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தக்கார் குரல் மாத இதழ் வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தி நாளான கடந்த 2 ஆம் தேதி நேற்று முன்தினம் நடைபெற்றது. தக்கார் குரலின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான யூசுப் பாஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பா.ஜோதிமணி, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் துணை ஆட்சியர் டீ.முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ம.வீ.ராஜதுரை, சென்னை பத்திரிக்கையாளர் […]

Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன்

Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன் சிறப்பு வாய்ந்த சூரசம்ஹாரம் கும்பாபிஷேகத்திற்கு பிறகு திருச்செந்தூரில் நடைபெறும் முதல் சூரசம்ஹாரம்“ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்” அறுபடை வீட்டின் நாயகனான முருக பெருமான் அருள்கிடைத்தால் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி என பல கோடி பக்தர்கள் தமிழ் கடவுளான முருக பெருமானை வழிபட்டு வருகின்றனர். தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு பல்வேறு இடங்களில் கோயில்களும், அந்த கோயில்களுக்கு என்று தனிக்கதை இருந்தாலும் முருக பெருமான் என்றாலே அனைவரின் […]

Anesthesia in Tamilnadu | மயக்க மருந்தில் அதிர்ச்சி

உலகம் முழுவதும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது நோயாளிகளுக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இந்த மயக்க மருந்தை எந்த சிகிச்சையின் போது எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். ஏனெனில் சிலருக்கு முழு மயக்கத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும், சிலருக்கு அரை மயக்கத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும், மயக்க மருந்து பயன்படுத்துவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் மயக்க மருந்து பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்தும் […]

TTV Dinakaran’s Plan | தேசிய ஜனநயாக கூட்டணிக்கு ஆதரவா? இல்லையா?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளரான டிடிவி தினகரன் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார். தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அவர் அதே கூட்டணியில் இருக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்காக பணியாற்றுவோம் என பாஜகவிடம் உறுதி கொடுத்து பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அதிமுகவில் இருந்து 5 ஆவது […]

chess Championship 2026 | 2026 உலக செஸ் சாம்பியன்ஷிப்

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை இதுவரை திவ்யா தேஷ்முக மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் பெற்றிருந்த நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி மூன்றாவதாக தகுதி பெற்றுள்ளார்.உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற மகளிர் கிராண்ட் சுவிஸ் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்றதன் மூலம், மூன்றாவது இந்தியராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் பிரிவின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் 24 வயதான செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, சீனாவைச் […]

Tamilnadu hindu religious | பாஜகவை மிஞ்சும் அறநிலையத்துறை

கடந்த 2014 முதல் இந்தியாவை ஆண்டு வரும் பாஜக, ஒரு மதவாத கட்சி என்றே பார்க்கப்படுகிறது. பாஜகவின் செயல்பாடு இந்துக்களுக்கு ஆதரவாகவும், மற்ற மதத்தினருக்கு எதிராக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் பாஜகவின் அரசியல் செயல்பாடு ஏற்று கொள்ளப்பட்டாலும் திராவிட கட்சிகள் ஆளும் தமிழகத்தில் பாஜகவின் இந்துத்துவா என்ற திட்டம் இதுவரை ஏற்று கொள்ளப்படவில்லை. இந்துக்களுக்காக மட்டுமே பாஜக செயல்பட்டு வருகிறது என்ற நிலை இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவை மிஞ்சும் அளவிற்கு தமிழ்நாடு இந்து […]

TN Alcohol misuse | அஞ்சும் தமிழக காவல்துறை

பொதுவாக திமுக ஆட்சி காலங்களில் காவல் துறையில் செயல்பாடு சற்று மந்தமாகவும், அதிமுக ஆட்சி காலங்களில் காவல்துறையின் செயல்பாடு அதிரடியாகவும் இருக்கும் என்பது ஒரு மரபாகவே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் காவல் துறையின் செயல்பாடு அதிரடியாகவே இருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மந்தமாக தொடங்கிய காவல் துறையின் செயல்பாடு தற்போது முழுவதும் மந்த நிலையில் உள்ளது. காவல்துறை அதனுடைய காக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது என முதல்வர் […]

TN Assembly Election | 2026 சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தங்களுடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.ஆளுங்கட்சியான திமுக, கரூரில் முப்பெரும் விழா மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்பாகவே தனது சுற்று பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது பிரச்சார பயணங்களை துவக்கியுள்ளனர். கடந்த ஆண்டு புதியதாக கட்சி தொடங்கிய நடிகர் […]

Brain Eating Amoeba | மூளையை தின்னும் அமீபா

நேக்லிரிய பௌலிரி எனும் அமீபா (ஒரு செல் உயிரினத்தின் வகை) வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவையாகும். உலகெங்கிலும் உள்ள ஏரி, ஆறு, பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும் ஒரு உயிரியை அமீபா என அழைக்கிறோம். இதுபோன்ற இடங்களில் மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாகச் சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கிறது. அமீபா மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இந்த தொற்று ஏற்பட்ட நபருக்குக் காய்ச்சல் […]

ECR New plan | ஈசிஆரின் புதிய அடையாளம்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் அனைத்து மக்களும் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் அனைத்து மக்களும் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட மாபெரும் பேருந்து நிலையம், தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், […]

Chennai Fake beggers | பீதியில் பொதுமக்கள்

தமிழகத்தில், குறிப்பாக தலைநகர் சென்னையில், யாசகம் கேட்பவர்கள் (பிச்சைக்காரர்கள்) — குடும்பத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், வறுமையின் பிடியில் சிக்கியவர்கள் உள்ளிட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு அரசு காப்பகங்களை கட்டி இருக்கிறது. யாசகர்கள் இல்லாத நகரமாக சென்னையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், குடும்பத்தால் கைவிடப்பட்டு தனியாக வாழும் முதியவர்கள் மற்றும் ஆதரவில்லாதவர்கள், யாசகம் கேட்டு தங்களது பசியை போக்கி வருகின்றனர்.ஆனால் தற்போது சென்னையில் யாசகம் கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

Pak officer waved TN | வேவு பார்த்த பாகிஸ்தான்

தமிழகத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கின் முக்கிய திருப்பமாக, தமிழக சிறப்பு நீதிமன்றம் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்னாள் துணை தூதர் அமீர் சுபைல் சித்திக் என்பவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் அக்டோபர் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாகிஸ்தான் உளவு செயல்பாடுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணை, நாடு முழுவதும் […]

ADMK EPS Condemns | எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று தமிழகத்தில் அந்த வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய […]

Trichy prison dead | திருச்சி மத்திய சிறை

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார். இவருக்கு வயது 19. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. தகவலறிந்து உடனடியாக சென்ற சிறை காவலர்கள் சுபினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]

chitfund fraud arrest | சிட்பண்டு நிறுவனத்தில் மோசடி

அரும்பாக்கம் பகுதியில் சிட்பண்டு நிறுவனம் நடத்தி ரூ.2.4 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 2 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை, கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரும்பாக்கம் பகுதியில் உள்ள அச்சலிஸ் சிட்பண்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் ரூ.2.17 லட்சம் செலுத்தியுள்ளார். சீட்டு பணம் முதிர்வடைந்த பின்னரும் மேற்படி டில்லிபாபு உட்பட சுமார் 70 பொதுமக்களிடம் பணம் ரூ.2.4 கோடிக்கு […]

90 lakhs fraud | ரூ.90 இலட்சம் மோசடி

சைதாப்பேட்டையிலுள்ள தனியார் வங்கியில் தங்க நகைகளை வேறொருவர் பெயரில் அடமானம் வைத்து ரூ.90 இலட்சம் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் வங்கி மேலாளர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, சைதாப்பேட்டை, VGP சாலையில் வசித்து வரும் சுலைமான், என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுலைமான், கிண்டி, லாயர் ஜெகநாதன் தெருவிலுள்ள Catholian Syrian Bank (CSB) வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துக் கொண்டு, அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், பணம் […]

17 years boy dead | கடலில் மூழ்கிய சிறுவன்

தொண்டி அருகேநம்புதாளை கடலில் படகை நிறுத்தச் சென்றதில் 17 வயது சிறுவன் மாயமாயமான நிலையில் அவனது உடல் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை கடல் பகுதியில், புயல் எச்சரிக்கை காரணமாக கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை, கடலின் ஆழமான பகுதிக்குத் தள்ளி பத்திரமாக நிறுத்தி வைக்க மூன்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.படகை நிறுத்திவிட்டு மூவரும் அங்கிருந்து கரைக்கு நீந்தி வந்தனர். அப்போது, ஆகாஷ்,  பரந்தாமன் ஆகிய இரண்டு மீனவர்கள் முதலில் பத்திரமாக நீந்தி […]

Tiruvallur welfare scheme | நலத்திட்ட உதவிகள் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்க விழா திருவேற்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப்,எம் பி சசிகாந்த் செந்தில் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 333.26 கோடி மதிப்பீட்டில் 377 முடிவிட்ட திட்ட பணிகளையும் ரூபாய் 137.38 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளையும் […]

Hockey world cup | ஹாக்கி உலகக் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்டம் ஹாக்கி உலகக் கோப்பை காட்சிப்படுத்துதல் மற்றும் வழிய அனுப்பி வைத்த விழா திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல் முறையாக நமது தமிழ்நாட்டில் 14 வது எஃப் ஐ எச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் ஆண்கள் வருகின்ற 28.11.2025 முதல் தொடங்கி 10.12.2025 வரை எஸ் டி ஏ டி எம் ஆர் கே ஆக்கி விளையாட்டு அரங்கம் சென்னையிலும் மற்றும் எஸ் […]

ditwa new cyclone | உருவானது புதிய புயல்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டிட்வா புயல் இன்று உருவாகி உள்ளது. இது குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறியதாவது:- சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, நோக்கி டிட்வா புயல் நகரும். வரும் 27, 28-ல் கடலோர தமிழகம், புதுவை, காரைக்காலில் அதிகபட்சமாக மணிக்கு 40-50 கி.மீ.வரை தரைக்காற்று […]

sengottaiyan joins TVK | செங்கோட்டையனுக்கு பதவி

செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; 2026 -ல் தவெக தலைவர் விஜயை மக்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு ‘தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியை அறிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்; தாம் சார்ந்திருந்த கழகத்தின் […]

Indonesia Earthquake | இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவானது நிலநடுக்கத் தகவல் புல்லட்டின் படி, இந்த நிலநடுக்கம் 25 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது, அட்சரேகை 2.68°N மற்றும் தீர்க்கரேகை 96.07°E இல் ஆரம்ப ஆயத்தொலைவுகளுடன் உள்ளது. இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்ட தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம், இருப்பினும், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளது. எனினும், […]

Goa Ramar Statue | கோவாவில் ராமர் சிலை

ஆசியாவிலேயே மிக உயரமான, 77 அடி வெண்கல ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ராமரின் 77 அடி வெண்கல சிலை நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை. பூஜைகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது. நாளை பிற்பகல் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார். […]

Ditwa cyclone alert | அச்சுறுத்தும் டிட்வா புயல்

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது புயல் காரணமாக ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நாகை, புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது நாளை […]

Srilanka flood death | சுழற்றி அடிக்கும் வெள்ளம்

இலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளநீரில் வீடுகள் மூழ்கியதால் பலர் கூரைக்கு ஏரிச்சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர்களில் சென்று மக்களைக் காப்பாற்ற முயல்கின்றன. 17 வட்டாரங்களிலிருந்து கிட்டத்தட்ட 6,000 பேர் அரசாங்க அவசரகாலக் கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கடலோரப் பகுதிகளில் வசிப்போரை உடனடியாக வெளியேறி பத்திரமான இடங்களுக்குச் செல்லுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பல இடங்களில் பாறைகள், மண், மரங்கள் ஆகியவை சரிந்து […]

Putin visit india | இந்தியா வரும் புதின்

ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் பயணமாக டிசம்பர் 4-ந்தேதி இந்தியா வர உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது, ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், இந்தியக் குடியரசுத் தலைவரும் புடினை வரவேற்று, விருந்து அளிக்கவுள்ளார். புடினின் இந்தப் பயணம், இந்தியா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையை அமைக்கவும், பரஸ்பர நலன் […]

Cyclone Ditwah alert | அச்சுறுத்தும் டிட்வா புயல்

வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா ,சென்னை நகர், புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், காரைக்காலில் 5ம் எண் புயல் சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. நாளை மறுதினம் டிட்வா புயல் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இன்று தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை என 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 13 […]

Red alert districts | வெளியே வர வேண்டாம்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இன்று (நவ.29) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி, ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்டும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல, நாளை (நவ.30) திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலர்டும்; சென்னை, காஞ்சிபுரம், […]

srilanka emergency declared | அவசரநிலை பிரகடனம்

இலங்கையில், டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து அதிபர் அநுர குமார திசநாயக அறிவித்துள்ளார். இலங்கையில், வரலாறு காணாத கனமழை பெய்ய காரணமான டிட்வா புயல் இன்று (நவ. 29) காலை அந்நாட்டின் எல்லையைக் கடந்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது.இந்த நிலையில், இலங்கையின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் உடனடியாக “அவசரநிலை” அறிவிக்க வேண்டுமென அதிபர் […]

Cyclon ditwa status | டிட்வா புயலின் நிலை

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் […]

Rajbhavan name changed | ராஜ்பவன் பெயர் மாற்றம்

ராஜ் பவன் என இருந்த பெயர் லோக் பவன் (மக்கள் பவன்) என மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள் ‘ராஜ் பவன்’ என அழைக்கப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை ‘ராஜ் நிவாஸ்’ என அழைக்கப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாகவே கூறி […]

Sivagangai bus incident | சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகானந்தா பாலிடெக்னீக் கல்லூரி அருகே காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் எட்டுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு […]

Today School leave | பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் […]

Ditwa cyclone update | மழை வெள்ள பாதிப்பு

மழை, வெள்ள பாதிப்புக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தினார். டெல்டா மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், பயிர் சேதம் குறித்து ஆலோசனை. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், மழை, வெள்ள பாதிப்புக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

elon musk son name | எலான் மஸ்க்கின் மகன்

எனது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் மகனுக்கு சேகர் என பெயர் சூட்டியுள்ளதான் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய எலான் மஸ்க், எனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருக்கும் எனக்கும் பிறந்த மகன்களில் ஒருவருக்கு, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரின் நினைவாக சேகர் என்ற பெயரை சூட்டியுள்ளோம். எனது மனைவி ஷிவான், கைக்குழந்தையாக இருக்கும்போதே அவரை அவரது பெற்றோர்கள் தத்துக்கொடுத்துவிட்டனர்.அவரது தந்தை பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டு மாணவர் […]

Chennai rain update | வெளுத்து வாங்கும் மழை

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Nainar about sengottaiyan | அமைச்சரை சந்தித்தது ஏன்

அமைச்சர் சேகர் பாபுவை செங்கோட்டையன் சந்தித்தது ஏன்? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை (நவ. 27) அன்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அன்றைய செய்தியாளர் சந்திப்பில், “தமிழ்நாடு அரசியலில் மாற்றம் வேண்டும், தூய்மையான அரசியல் வேண்டும்” என்பதற்காக தவெகவில் இணைந்ததாகக் கூறியிருந்தார் செங்கோட்டையன். பாஜகவின் வழிகாட்டுதலில் தவெகவில் இணைந்தார் என திமுக கூட்டணி கட்சிகளும், […]

Tiruvannamalai maha deepam | நாளை திருக்கார்த்திகை மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது. நாளை அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. பொதுவாக கார்த்திகை தீபம் பவுர்ணமியை ஒட்டியே வரும். அதனால், லட்சக்கணக்கான பக்தர்கள், மகாதீபத்தை தரிசித்தவாறே கிரிவலம் செல்வர். இந்த நிலையில், கார்த்திகை […]

Trichy karthigai deepam | மலைக்கோட்டையில் தீபம்

திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை, இது உச்சிப்பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோயில் ஒன்று உள்ளது. இந்த உச்சி பிள்ளையார் கோயிலில் 100 கால் மண்டபம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும் மலைக்கோட்டையின் மீது […]

Tenkasi oldlady suffers | கனமழையால் இடிந்த சுவர்

வடகிழக்கு பருவமழையால் வீட்டை இழந்த மூதாட்டி தவெக மாவட்ட செயலாளர் நேரில் சென்று உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது .இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் சில இடங்களில் வீடுகளும் சேதமடைந்தது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வி கே புதூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கனமழை வெளுத்து […]

Cows in Mainroad | விபத்து ஏற்படும் அபாயம்

புட்லூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புட்லூர் மேம்பாலம் முதல் அரண்வாயில் வரை புதிய சாலை கடந்த மாதத்தில் போடப்பட்டு திறக்கப்பட்டது மூன்று கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட இந்த சாலையில் போக்குவரத்து அதிகமான முறையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன புதிய சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் பேராபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த புதிய சாலையில் தொடர்ந்து […]

Redhills rain rescue | படகு மூலம் மீட்பு

செங்குன்றம் அருகே மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மக்களை தீயணைப்பு துறையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர். சென்னை செங்குன்றம் அடுத்த நியூ சன் கார்டன் இரண்டாவது பிரதான சாலை பாலவாயில் பகுதியில் வீட்டில் மழை நீர் புகுந்ததால் வெளியில் வர முடியாமல் அவதிக்குவுள்ளாகி இருந்தனர். இதனை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த பச்சையப்பன் […]

Tiruvallur school building | திருவள்ளூர் பள்ளி கட்டிடம்

திருவள்ளூரில் புதிதாக திறக்கப்பட உள்ள பள்ளி கட்டிடத்தை, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் ஆய்வு செய்தார் . திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைத்கப்பட்ட 51 சென்ட் அரசு நிலத்தில் ரூ.7.50 கோடியில் பள்ளி கட்டிடம் கட்டு மானப் பணிகளை வி.ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 200க்கும் […]

Tiruvallur road protest | காலவரையற்ற வேலை நிறுத்தம்

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ளவர் லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எம். ஆர்.பி., செவிலியர்கள் […]

Election commission warns | தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. பா.ம.க.வில் நிறுவனர் இராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்துவிட்டதால், இனி பாமகவுக்கு நான் தான் தலைவர் என இராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையம் தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரித்துவிட்டது என்று அன்புமணி தெரிவித்து வருகிறார்.இந்நிலையில், அன்புமணி […]

Tiruvallur heavy rain | திருவள்ளூர் கனமழை

திருவள்ளூர் மாவட்டத்தில் மழையினால் பாதிப்படைந்த பயிர்களின் சேதம் குறித்து கணக்கிடும் பணியை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் நேரில் சென்று ஆய்வு செய்தனர் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் அளவிற்கு மா மரம் தென்னை,வாழை மல்லி, தர்பூசணி , காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களாக மழை பெய்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் அளவிற்கு வேளாண்மை […]

MP Kanimozhi speech | திமுக எம்பி கனிமொழி பேச்சு

தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் என கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் பிரச்சினையை எழுப்பினோம். ஆங்கிலேயர்கள் வைத்த நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றச்சொல்கின்றனர். மக்களின் பக்தியை நிறுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.மதம்,பக்தியின் பெயரால் குளிர்காய நினைக்கிறது பாஜக. பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.திராவிட கட்சிகளின் மதப்பிரச்சினைகள் இல்லாத அமைதியான தமிழகமாக உள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்து கொள்ளவில்லை. திராவிட கட்சிகளின் ஆட்சியில் மதப்பிரச்சினைகள் இல்லாத அமைதியான […]
error: Content is protected !!