உண்மையின் உறைவிடம்…

டுடே டிரெண்டிங்248 Videos

Srilanka ditwa cyclone | தமிழக அரசு நிவாரணம்

இலங்கையில் இதுவரை இல்லாத வகையில், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வந்ததால் கனமழையால், வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர்.கனமழையால் தொடர்ச்சியாக 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து விட்டன. 1.08 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 2.19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் […]

Tiruvallur bus stand | பிரம்மாண்ட விழா

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பேருந்து நிலையத்தில் வசந்தம் கூட்டமைப்பு சார்பாக பிரம்மாண்டமாய் விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. ஸ்டீபன் IRCDS இயக்குனர் திரு. பழனி .பூண்டி பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். உடற்கல்வி ஆசிரியர். முன்னாள் பூண்டி பஞ்சாயத்து தலைவர். காவல்துறை அதிகாரிகள். சட்டப் பணிகள் ஆனைக் குழுவில் இருந்து வழக்கறிஞர்கள். பூண்டி ஒன்றிய நிர்வாகிகள். மாவட்ட நிர்வாகிகள். திருவள்ளூர் ஒன்றிய நிர்வாகிகள். கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகிகள். கலந்து கொண்டனர் இந்த […]

TVK Vijay speech | கடப நாடக திமுக அரசு

மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது என விஜய் தெரிவித்துள்ளார்.. இது குறித்து பதிவிட்டுள்ள அவர், என் நெஞ்சில் குடியிருக்கும்.. புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம்.எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி […]

Aganda 2 release | திரையரங்குகளில் அகண்டா 2

நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டிசம்பர் 12ஆம் தேதி முதல் திரையரங்குகளில் அகண்டா படத்தை திரையிட 14 ரில்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. EROS international Media limited பட நிறுவத்துக்கும், 14 Reels Entertainment Private Limited என்ற நிறுவனத்துக்கும் இடையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதில், EROS நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 11 கோடியே 22 லட்சம் ரூபாயை […]

thiruparankundram-sikandar-dargah | வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா, பெரியவீதி பள்ளிவாசல் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மதுரை மாநகர் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சிக்கந்தர் தர்கா மற்றும் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு […]

ADMK EPS Speech | திமுக ஆட்சியில் ஊழல்

அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தீய சக்தியான திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம்.நாட்டு மக்களைத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களது வாரிசாகப் பார்த்தனர். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் முதல்வர் […]

Rahul Gandhi congress | ராகுல் காந்தியின் முடிவு

ஜனவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், இதனை ஒருங்கிணைப்பதற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்முன்னாள் மாநில தலைவர்களான கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசு, கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். […]

SIR Forms Uploaded | படிவங்கள் பதிவேற்றம்

தமிழகத்தில் விநியோகிக்கப்பட்ட 100% SIR படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடந்த நிலையில், எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 6.41 கோடி (6,41,14,587) வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட 6,40,84,624 கணக்கீட்டுப் படிவங்களில் நேற்றுவரை 6,38,25,877 (99.55%) படிவங்கள் பதிவேற்றப்பட்டன. இந்த நிலையில், இந்தியத் தேர்தல் […]

TVK Vijay authority | தவெக கூட்டத்தில் தீர்மானங்கள்

விஜய்யின் தவெக கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், இன்று (11ஆம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.இந்தக் கூட்டத்தில், அண்மையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் மற்றும் நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு அவரின் தலைமை விரும்பி வருவோரை […]

Loksabha tamiliachi speech | தமிழச்சியின் வலியுறுத்தல்

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார். இது குறித்து பேசிய அவர், உலகில் முத்தழிழ் அறிஞர் கருணாநிதி போன்ற ஆளுமையை காண்பது அறிவு. மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். திராவிட மரபின் சாம்பியன் கருணாநிதி. சமூக நீதிக்கும், நல்லாட்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, ‘இவ்வுலகில் பல […]

padayappa re release | தெறிக்கவிட்ட படையப்பா

நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, ‘படையப்பா’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் கொண்டாடிய அல்லது கொண்டாட மறந்த படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அதில் சில படங்கள் ரீ-ரிலீஸிலும் ஆதிக்கத்தை செலுத்தின. குறிப்பாக புதிய படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ரீ-ரிலீஸ் படங்களில் கொண்டாட்டங்களும் அமைந்துள்ளன. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ‘படையப்பா’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர் முன்பதிவில் மட்டும் 85 […]

Today gold rate | புதிய உச்சத்தில் தங்கம்

தங்கம் விலை இன்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், நகைபிரியர்களுக்கு பேரிடியாக தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,370க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று […]

Today rain update | தமிழகத்தில் இன்று மழை

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.தமிழகம், புதுவை மற்றும் […]

Meera mithun case | சென்னை உயர் நீதிமன்றம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக கூறி அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மீறி மிதுனுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு போலீசார் வழக்குப் […]

Messi event collapse | மெஸ்ஸி ரசிகர்கள் ஆத்திரம்

கொல்கத்தாவில் மெஸ்ஸியை காண முடியாத ரசிகர்கள், ஏமாற்றத்தால் ரகளையில் ஈடுபட்டனர். அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் கொல்கத்தாவில் அவரது சிலையை அவரே திறந்து வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து சால்ட் லேக் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் மெஸ்ஸி தோன்றுவார் என கூறப்பட்டு, அதற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து இருந்தது. சுமார் 4500 முதல் 12500 வரை விலை கொடுத்து அந்த டிக்கெட்களை […]

Savukku shankar arrest | போலீஸின் செயல்

சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை வீட்டின் கதவை உடைத்து ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கைதும் செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.இந்நிலையில், அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா கடந்த […]

MK Stalin announced | முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!

விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மகளிருக்கு கலைஞர் பெயரால் வழங்கப்படும் உரிமைத் தொகை 1,000 ரூபாயை நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் வழங்கி கொண்டிருக்கிறோம். இந்நிலையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு 1,000 ரூபாயை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வந்தது. […]

Vijay public meeting | விஜய்யின் மக்கள் சந்திப்பு

ஈரோட்டில் வருகிற 18ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விஜய்க்கு மாவட்ட எஸ்.பி சுஜாதா அனுமதி அளித்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த ரூ.50 ஆயிரம் வாடகை என்றும், அதேபோல் ரூ.50 ஆயிரம் டெபாசிட் என்ற நிபந்தனையும் விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது. அதேநேரம், புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது […]

Australia gun fire | ஆஸ்திரேலியாவில் பயங்கரம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நடைந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் அமைந்துள்ள போண்டி கடற்கரையில் அமைந்துள்ளது. இக்கடற்கரையில் யூத பண்டிகைகளில் ஒன்றான ஹனுக்காவை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த சூழலில் போண்டி கடற்கரையில் இன்று மாலை 5 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் […]

Gold rate today | தங்கம் விலை உயர்வு

தமிழ்நாட்டில் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனையானது.இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தக்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தூய […]

Naam thamizhar katchi | நாதக பொதுக்கூட்டம்

நாதக பொதுக்கூட்டம் டிச.27ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Sengottaiyan speech | செங்கோட்டையன் உறுதி

தமிழக வெற்றிக் கழக மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதாக மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் தவெகவில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் தவெகவுக்கு வரவேற்பு இருக்கிறது. தவெக மற்றொரு அதிமுகவாக மாறும். இனிமேல் அதிமுக கிடையாது’’ என்றார்.

Erode vijay campaign | ஈரோட்டில் பேசும் விஜய்

ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த பரப்புரையில் கலந்துகொள்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தவெக தலைமை வெளியிட்டுள்ளது. மக்கள் சந்திப்பு நடைபெறும் இடங்களில் காவல் துறையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு BOX-களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Mexico plane crash | மெக்சிகோ விமான விபத்து

மெக்சிகோவில் உள்ள சான் மேட்டியோ அட்டென்கோ என்ற இடத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது ஒரு தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி, ஏழு பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார். அதற்குள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்து, டோலுகா விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், […]

opposition party protest | பெயரை மாற்ற எதிர்ப்பு

100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்குவதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்’ (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் இதற்கான நிதியை பாஜக விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாநிலங்கள் குற்றம்சாட்டின. இந்நிலையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி […]

ethiopias honary award | எத்தியோப்பியாவின் விருது

எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாட்டின் மிக உயரிய விருதான – எத்தியோப்பியாவின் தி கிரேட் ஹானர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான நாகரிகத்தால் கவுரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். உங்கள் அனைவருடனும், இந்த மாபெரும் எத்தியோப்பியா நாட்டில் இருப்பது […]

BJP Annamalai tweets | அடிப்படை வசதிகள் வேண்டும்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்று வரும் மிக முக்கியமான மருத்துவமனை. இங்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் அவலநிலையில் வைத்திருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, கடந்த மே […]

Today weather update | வானிலை நிலவரம் இன்று

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் […]

TVK Vijay speech | எம்.ஜி.ஆர் சொன்னா மாதிரி

திமுக ஒரு தீய சக்தி, தவெக தூய சக்தி என ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தில் தவெக விஜய் தெரிவித்துள்ளார். ஈரோடு பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய், நான்கூட யோசிப்பேன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒரே வார்த்தைச் சொல்லி திமுகவை காலி செய்தார்கள். அப்போது ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறார்கள் என்று யோசித்தேன்.இப்போதான் புரிகிறது. அவர்கள் கூறியதை நான் மீண்டும் கூறுகிறேன். திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி…. தவெக ஒரு தூய […]

BJP Annamalai Arrest | அண்ணாமலை திடீர் கைது

திருப்பூா், சின்னகாளிபாளையத்தில் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். திருப்பூர், சின்னகாளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் அங்கு குப்பையை தரம் பிரித்துக் கொட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து லாரிகளில் குப்பை ஏற்றப்பட்டு சின்னக்காளிபாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுசெல்லப்பட்டது. அங்கு கிராம மக்கள் திரண்டு லாரிகளைச் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் வாக்கு வாதம் […]

MK Stalin latest speech | என் வெற்றிக்கு பின்னால்

என் வெற்றிக்கு பின்னாலும் என் மனைவிதான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 18) சென்னை, கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருள்களை வழங்கி, உரையாற்றினார் அப்போது பேசிய அவர், ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் தான் இருக்கிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என்னுடைய மனைவிதான் – நான் […]

Tamilnadu voter list | வாக்காளர் வரைவு பட்டியல்

எஸ்.ஐ.ஆருக்கு பின் தமிழ்நாட்டில் மொத்தமாக 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின்பு 5.43 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.61 லட்சம் பேர் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,191 வக்காளர்கள் இருக்கிறார்கள். ஆண் வாக்காளர்கள் 2,66,63,233 பேரும் பெண் வாக்காளர்கள் 2,77,06,332 பேரும் உள்ளனர். மொத்தமாக வரைவு வாக்காளர் […]

Ma subramanian speech | சீனியாரிட்டி தான்

காலிப் பணியிடங்கள் உருவாகும்போது சீனியாரிட்டி அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், செவிலியர் பணியில் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே வழங்க முடியும். போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை ஆனால் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஒப்பந்த செவிலியர்களுக்கு பணியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசு யாரையும் கைவிடாது. 8 ஆயிரத்து மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

Winter session concludes | குளிர்க்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் இன்றுடன் (டிசம்பர் 19) நிறைவு அடைந்தது. இரு அவைகளும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்கள் அமளியில் முடிந்தாலும், 3-ம் தேதி முதல் ஆக்கபூர்வமாக நிகழ்வுகள் நடைபெற்றன. வந்தே மாதரம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் ஆகியவை குறித்தும் காரசார விவாதங்கள் நடைபெற்றன. முக்கியமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக […]

gaganyaan-mission | இஸ்ரோ அறிவிப்பு

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக சண்டிகரில் நடைபெற்ற பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளது. விண்கலம் பூமிக்கு திரும்பும்போது அதன் வேகத்தை குறைக்கும் பாராசூட்டுகள் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. சண்டிகரில் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் பாதையில் ராக்கெட் ஸ்லெட் வசதியில் சோதனை நடத்தப்பட்டது.

football-legend-ronaldo | கால்பந்து ஜாம்பவான்

ஹாலிவுட்டில் கார் ரேஸிங்கை வைத்து இயக்கப்பட்ட பிரபலமான திரைப்பட சீரீஸ் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன. இதற்கென உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இதன் 11வது மற்றும் கடைசி பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படம் தற்போது உருவாகி வருகிறது. 2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த கடைசி பாகத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோ இணைந்துள்ளார். இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு […]

ICC T20 Worldcup | முக்கிய வீரர் இல்லை

10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன.இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் […]

Chennai food festival | சென்னை உணவு திருவிழா

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழா தொடங்கப்பட்டது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த பாரம்பரிய சுவைமிக்க உணவுகளான ஆம்பூர் மற்றும் திண்டுக்கல் பிரியாணி, கொங்கு மட்டன் பிரியாணி, விருதுநகர் புரோட்டா, கடலூர் மீன் புட்டு, கருவாடு சூப், அரியலூர் தோசை, மயிலாடுதுறை இறால் வடை, சேலம் தட்டு வடை, காஞ்சிபுரம் கோயில் இட்லி, நீலகிரி ராகி களி, தூத்துக்குடியின் […]

railway hikes fare | ரயில் டிக்கெட் உயர்வு

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் டிசம்பர் 26 முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. 215 கி.மீ தூரத்திற்கு மேல் பயணிப்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. 215 கி.மீ-க்கும் குறைவான தூரம் பயணிப்போருக்குக் கட்டண உயர்வு இல்லை. மின்சார ரயில்கள் (Suburban trains) மற்றும் புறநகர் ரயில் பயணங்களுக்குக் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புகள்: 215 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் சாதாரண வகுப்புகளில் கி.மீ-க்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ வரை: […]

President murmu approves | அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விபி-ஜி ராம் ஜி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். லோக்சபா, ராஜ்யசபாவில் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்ட மசோதாவிற்கு(VB-G RAM-G) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.நாடாளுமன்றத்தின் இரு […]

railway hikes fare | ரயில் டிக்கெட் உயர்வு

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் டிசம்பர் 26 முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. 215 கி.மீ தூரத்திற்கு மேல் பயணிப்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. 215 கி.மீ-க்கும் குறைவான தூரம் பயணிப்போருக்குக் கட்டண உயர்வு இல்லை. மின்சார ரயில்கள் (Suburban trains) மற்றும் புறநகர் ரயில் பயணங்களுக்குக் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புகள்: 215 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் சாதாரண வகுப்புகளில் கி.மீ-க்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ வரை: […]

egg price increased | வரலாறு காணாத உச்சம்

தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லாததால் நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், முட்டை கொள்முதல் விலை 640 காசுகளாக அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் கோழி பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது.முட்டை கொள்முதல் […]

Nurses demand ma subramanian | மா சுப்பிரமணியன் பேட்டி

750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதி அளித்துள்ளார். கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலை.யில் போராட்டக் குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பொங்கலுக்கு முன் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய 724 செவிலியர்களுக்கு […]

Today rain update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 25-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகள், 26, 27-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் டிச.24 வரை வறண்ட […]

Bahubali rocket carrying | பாகுபலி ராக்கெட்

அமெரிக்காவின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), தனது வலிமையான LVM3-M6 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோளான புளூபேர்ட் பிளாக்-2 (BlueBird Block-2) விண்கலத்தை இன்று (புதன்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, புதன்கிழமை காலை 8:55 மணி அளவில் ராக்கெட் ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 15 நிமிடங்களில், […]

TVK Vijay statement | தவெக விஜய்யின் பதிவு

எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்.சூழ்ச்சிகளால் நம்மை வீழ்த்த நினைத்தவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளால் சொல்லொணா வேதனைக்குப் பிறகு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு என மூன்று மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நாம் கண்டோம்.அதிலும் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கோ இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் விதிக்கப்படாத எண்ணிலடங்கா நிபந்தனைகள். அதிகார முகமூடியின் எண்ணங்களே நிர்பந்தங்களாகவும் நெருக்கடிகளாகவும் நம்முன் வைக்கப்பட்டன. அத்தனையையும் அநாயாசமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக நம் மக்களைச் […]

TVK Vijay statement | தவெக விஜய்யின் பதிவு

எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்.சூழ்ச்சிகளால் நம்மை வீழ்த்த நினைத்தவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளால் சொல்லொணா வேதனைக்குப் பிறகு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு என மூன்று மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நாம் கண்டோம்.அதிலும் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கோ இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் விதிக்கப்படாத எண்ணிலடங்கா நிபந்தனைகள். அதிகார முகமூடியின் எண்ணங்களே நிர்பந்தங்களாகவும் நெருக்கடிகளாகவும் நம்முன் வைக்கப்பட்டன. அத்தனையையும் அநாயாசமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக நம் மக்களைச் […]

today weather update | வானிலை மையம் தகவல்

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.டிச.25ம் தேதி வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.டிச.26 மற்றும் 27ம் […]

Tiruvallur christmas celeb | கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக ஆலயங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார் என்பதை குறிக்கும் வகையில் டிசம்பர் 25 உலகம் முழுவதும் வனவிலங்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்டார் கட்டப்பட்டு அதிகாலை ஆலயத்திற்கு சென்று குடும்பமாக புத்தாண்டு வழிபாடு செய்தல் அதனைத் தொடர்ந்து குடும்பங்கள் ஒன்று கூடி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கேக் வெட்டி கொண்டாடுதல் ஆகியவை நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்கள் அற்புத ஜெபகோபுரம் […]

idiyappam vendors | உணவு பாதுகாப்புத் துறை

உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை உணவு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இடியாப்பம் விற்கும்போது கையுறை, தலையுறை அவசியம். உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Ajitha Agnel | அஜிதாவின் விபரீத முடிவு

தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெண்கள் அணி நிர்வாகி அஜிதா ஆக்னல், கட்சி பொறுப்பு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். கட்சி தொடங்கிய காலம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக உழைத்து வந்த அஜிதா, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கக்கோரி பனையூர் தலைமை அலுவலகத்தில் விஜயின் காரை மறித்து போராட்டம் நடத்தியிருந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று தெரிகிறது. தற்போது […]

idiyappam vendors | உணவு பாதுகாப்புத் துறை

உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை உணவு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இடியாப்பம் விற்கும்போது கையுறை, தலையுறை அவசியம். உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Chennai high court | பராசக்தி படத்திற்கு சிக்கல்

சுதா கொங்கராவின் பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில், கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தனது “செம்மொழி” என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள […]

Tamilnadu assemble date | கவர்னர் உரை நிகழ்த்துகிறார்

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன. 20-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார். நாங்கள் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். கவர்னர் சட்டசபையின் மாண்பை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். […]

puducherry ration shop | இனி ரேஷன் கடைகளில்

புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கி வரப்படும் நிலையில் சத்துணவுக்காக ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார் புதுச்சேரியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிறுதானிய வகையை சேர்ந்த கேழ்வரகு மாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. கேழ்வரகு கால்சியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்த ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது […]

Today gold rate | இன்றைய தங்கம் விலை

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,850க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் […]

seeman condemns thirumavalavan | திருமாவை சாடிய சீமான்

என்னையும், விஜயையும் பா.ஜ.க. பெற்றெடுத்தபோது அவர்தான் பிரசவம் பார்த்தார் என திருமாவளவனுக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில் பேசிய சீமான்,என்னையும், தம்பி விஜய்யையும் பற்றி ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என எனது அண்ணன் திருமாவளவன் கூறி இருக்கிறார். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் எங்களை பெற்றெடுத்த போது அவர்தான் அருகில் இருந்து பிரசவம் […]

tirupati sorgavasal ticket | சொர்க்க வாசல் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் ‘சொர்க்கவாசல்’ எனப்படும் ‘பரமபத வாசல்’ திறக்கப்பட்டு அந்த வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசனம் (வைகுண்ட துவார தரிசனம்) செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் […]

chennai highcourt | சென்னை உயர்நீதிமன்றம்

கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்குதான் எனசென்னை உயர் நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை முதல் மரியாதை 2023 ஆம் ஆண்டு முதல் திடீரென நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் […]

PMK Ramadoss cries | கண்கலங்கிய ராமதாஸ்

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “இந்த பொதுக்குழு, செயற்குழு 27 தீர்மானங்களை நிறைவேற்றிருக்கிறோம். இந்த நேரத்தில் எதை பேசி எதை விடுவது என்று எனக்குள் ஒரு குழப்பம் இருக்கிறது. ஏனென்றால் எனக்கு இருக்கின்ற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு மணி நேரம் தேவை. நான் இடையில் இடையில் பேசியிருக்கலாம். ஆனால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கேட்டுக் கொண்டிருந்தேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை எப்போது நான் […]
error: Content is protected !!