manipur violence | மணிப்பூரில் வன்முறை
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் டாங்குள் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். மணிப்பூரில் மீண்டும் வன்முறை காரணமாக உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
வன்முறை காரணமாக மணிப்பூரில் 2 நாட்களில் மட்டும் 30 வீடுகள் வரை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Total Page Visits: 104 - Today Page Visits: 3
