உண்மையின் உறைவிடம்…

டுடே டிரெண்டிங்248 Videos

CM MKStalin Tweets | தமிழ்நாட்டில் ஓடாது

பிரதமர் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஓடாது என முதல்வர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே, மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நீங்கள் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ மாநிலங்களான உத்திர பிரதேசம், […]

Gas Cylinder issue | சிலிண்டர் இல்லை

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் எரிவாயு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. ஓட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி, ஃபிரைடு ரைஷ் உள்ளிட்டவை குறைப்பு, மூடப்படும் நிலை, மண்டபங்களில் திருமணங்களை நடத்துவதில் சிக்கல் என நெருக்கடி அதிகரித்து வருகிறது. படிப்படியாக நெருக்கடி அதிகரித்து 10, 15 நாட்களை தாண்டி விட்டால் வீட்டிற்கே சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.

Sengottaiyan press meet | செங்கோட்டையன் பேட்டி

அதிமுகவில் ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காது என்று தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தவெகவால் காங்கிரஸ் கட்சிக்கு பயன் கிடைத்துள்ளது. என்டிஏ கூட்டணியாக இருந்தாலும், திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி.. எங்களை காட்டி கூடுதல் சீட்டு பெறும் என்ற நிலை உள்ளது. எங்களை காட்டி கூடுதல் சீட்டுகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. தவெக தனித்துப் போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அதேபோல் ஜெயக்குமாருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப் போவதில்லை.. அவர் வேண்டுமானால் தவெகவுக்கு தாராளமாக […]

Jayalalitha Assets | ஜெயலலிதாவின் சொத்துகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரியை செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.அதில், ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார். வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது என்றது.ரூ.13 கோடி வரி பாக்கியை செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பி நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதா, தீபக் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Chennai high court | பராசக்தி படத்திற்கு சிக்கல்

சுதா கொங்கராவின் பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில், கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தனது “செம்மொழி” என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள […]

Tiruvallur bus stand | பிரம்மாண்ட விழா

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பேருந்து நிலையத்தில் வசந்தம் கூட்டமைப்பு சார்பாக பிரம்மாண்டமாய் விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. ஸ்டீபன் IRCDS இயக்குனர் திரு. பழனி .பூண்டி பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். உடற்கல்வி ஆசிரியர். முன்னாள் பூண்டி பஞ்சாயத்து தலைவர். காவல்துறை அதிகாரிகள். சட்டப் பணிகள் ஆனைக் குழுவில் இருந்து வழக்கறிஞர்கள். பூண்டி ஒன்றிய நிர்வாகிகள். மாவட்ட நிர்வாகிகள். திருவள்ளூர் ஒன்றிய நிர்வாகிகள். கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகிகள். கலந்து கொண்டனர் இந்த […]

chess Championship 2026 | 2026 உலக செஸ் சாம்பியன்ஷிப்

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை இதுவரை திவ்யா தேஷ்முக மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் பெற்றிருந்த நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி மூன்றாவதாக தகுதி பெற்றுள்ளார்.உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற மகளிர் கிராண்ட் சுவிஸ் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்றதன் மூலம், மூன்றாவது இந்தியராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் பிரிவின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் 24 வயதான செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, சீனாவைச் […]

Today weather update | வானிலை மையம் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் நாளை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் […]

chile wild fires | பயங்கர காட்டுத்தீ

சிலி நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில், மக்களுடன் காடுகள், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்து உள்ளார்.சிலியின் மத்திய பையோபையோ பகுதி, பக்கத்தில் உள்ள நூபிள் பகுதி என பல இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் வன பகுதிகள் தீயில் எரிந்து போயுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் எரிந்துள்ளன. இதனை தொடர்ந்து, 50 […]

TVK Vijay Sangeetha | விஜய் சங்கீதா விவாகரத்து

விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று வழக்கறிஞர் மூலமாக விஜய் கூறியதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில், விஜய் உடனான விவாகரத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க விஜய் தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். நான் பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருகிறேன். சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை.. விவாகரத்து கோரியுள்ளதால், தற்போது சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். எனக்கு வீட்டிற்குள் […]

Edappadi condemns dmk | என்ன செஞ்சீங்க

திருப்பூரில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாத தாக்குதல் எனும் கொடூர உச்சத்துக்கு தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது திமுக அரசு. தீவிரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் என்ஐஏ […]

Tamilnadu assemble date | கவர்னர் உரை நிகழ்த்துகிறார்

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன. 20-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார். நாங்கள் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். கவர்னர் சட்டசபையின் மாண்பை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். […]

egg price increased | வரலாறு காணாத உச்சம்

தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லாததால் நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், முட்டை கொள்முதல் விலை 640 காசுகளாக அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் கோழி பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது.முட்டை கொள்முதல் […]

Cows in Mainroad | விபத்து ஏற்படும் அபாயம்

புட்லூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புட்லூர் மேம்பாலம் முதல் அரண்வாயில் வரை புதிய சாலை கடந்த மாதத்தில் போடப்பட்டு திறக்கப்பட்டது மூன்று கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட இந்த சாலையில் போக்குவரத்து அதிகமான முறையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன புதிய சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் பேராபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த புதிய சாலையில் தொடர்ந்து […]

ECR New plan | ஈசிஆரின் புதிய அடையாளம்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் அனைத்து மக்களும் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் அனைத்து மக்களும் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட மாபெரும் பேருந்து நிலையம், தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், […]

Actress kasthuri questioned | நடிகையின் கேள்வி

ஜனநாயகம் திரைப்படத்தின் விவகாரத்தை விஜய் பேசாதது ஏன் என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக நிர்வாகியான நடிகை கஸ்தூரி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெக தலைவரான நடிகர் விஜய் மாநாட்டில் மட்டுமே பேசுகிறாரே தவிர மற்ற நேரத்தில் பேசுவதில்லை. கடந்த வருடம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது ஆனால் எந்த போராட்டத்திலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. ஜனநாயகம் திரைப்பட விவகாரத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பேசினார்களே தவிர இதுவரை நடிகர் விஜய் […]

Actress kushboo byte | நடிகை குஷ்பு பேட்டி

தணிக்கைச் சான்று பெறாமல் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, பின் மத்திய அரசு மீது குற்றம் சாட்டக்கூடாது என குஷ்பு கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அனைத்திற்கும் மத்திய அரசை குறை சொல்பவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. என் குழந்தையே பெரிய விஜய் ரசிகர். விஜய் படம் வரவில்லை என்று நானே வருத்தப்பட்டேன். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தானே.அதனால சிபிஐ விசாரணை நடக்கிறது. விஜய் மீது தவறு இல்லை எனில் […]

double murder arrest | நெல்லை இரட்டை கொலை

திருநெல்வேலியில் இரட்டைக் கொலை விவகாரத்தில் போலீசாரால் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பத்து பகுதியில் நேற்றிரவு சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கஞ்சா போதைக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக கொலை, கொலை முயற்சி உட்பட எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஐந்து தனிப் படைகள் […]

Rahul gandhi angry | பாரத மாதாவையே

நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சங்னகளை முன்வைத்துள்ளார். அப்போது, “அமெரிக்க அதிபட் டிரம்ப், கழுத்தை நெரிப்பதால் நாட்டையே அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார் மோடி. இந்திய தரவுகளை அமெரிக்கா எடுத்துக்கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என மோடிக்கு தெரியவில்லை” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய ராகுல் காந்தி , பிரதமர் மோடி நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு […]

chennai highcourt | சென்னை உயர்நீதிமன்றம்

கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்குதான் எனசென்னை உயர் நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை முதல் மரியாதை 2023 ஆம் ஆண்டு முதல் திடீரென நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் […]

Today gold rate | புதிய உச்சத்தில் தங்கம்

தங்கம் விலை இன்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், நகைபிரியர்களுக்கு பேரிடியாக தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,370க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று […]

srilanka emergency declared | அவசரநிலை பிரகடனம்

இலங்கையில், டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து அதிபர் அநுர குமார திசநாயக அறிவித்துள்ளார். இலங்கையில், வரலாறு காணாத கனமழை பெய்ய காரணமான டிட்வா புயல் இன்று (நவ. 29) காலை அந்நாட்டின் எல்லையைக் கடந்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது.இந்த நிலையில், இலங்கையின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் உடனடியாக “அவசரநிலை” அறிவிக்க வேண்டுமென அதிபர் […]

PM modi speaks about GST | ஜிஎஸ்டி யில் அடுத்த மாற்றம்

ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்கள் மேலும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் […]

sunita-williams-retires | அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாசாவில் 27 ஆண்டுகள் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மிக முக்கியமான விண்வெளி வீராங்கனைகளில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால விண்வெளிப் பயணத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த, டிசம்பர் 27, 2025 முதல் இவரது ஓய்வு அமலுக்கு வந்ததாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் […]

trump epstein statue | டைட்டானிக் பாணியில்

அமெரிக்க தலைநகரான வாஷிங்கடன் டிசியில் உள்ள நேஷனல் மால் என்ற வணிக வளாகத்தில் எப்ஸ்டீன் உடன் டிரம்ப் இருக்கும் சிலை திறக்கப்பட்டுள்ளது. டைட்டானிக் படத்தில் ஆருயிர் காதலர்களாக ஜாக் மற்றும் ரோஸ் கப்பலின் முகப்பில் கைநீட்டி நிற்கும் காட்சி உலகப் பிரசித்தம். அதேபோல எப்ஸ்டீன் – டிரம்ப் நிற்பதுபோல இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சீக்ரெட் ஹேண்ட்ஷேக் என்ற கலை அமைப்பு இந்த சிலையை நிறுவியுள்ளது. டிரம்ப்புக்கு எதிரான போராட்ட வடிவமாக இந்த சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது.முன்னதாக நேஷனல் […]

nallakannu passed away | மறைந்தார் போராளி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சமூக விடுதலை போராட்ட வீரருமான நல்லகண்ணு உடல் நலக்குறைவால் காலமானார். தோழர் இரா. நல்லகண்ணு கட்சியில் உறுப்பினராக சேரும் பொழுது கட்சிக்கு வயது 17.15 வயதிலேயே நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தெருக்களிலே இந்திய விடுதலைக்கு முழக்கமிட்ட சின்னஞ்சிறு இளைஞர். அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியாவிற்கு என்று விடுதலை வரும் என்ற தாகம் நெஞ்சிலே தேங்கிக் கிடந்த நேரம்… தன் வயதொத்த இளைஞர்களுடன் வீதிகளிலே மகாகவி பாரதியின் ‘என்று தணியும் இந்த சுதந்திர […]

Today weather report | வெப்பநிலை உயரும்

தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், […]

MK Stalin latest speech | என் வெற்றிக்கு பின்னால்

என் வெற்றிக்கு பின்னாலும் என் மனைவிதான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 18) சென்னை, கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருள்களை வழங்கி, உரையாற்றினார் அப்போது பேசிய அவர், ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் தான் இருக்கிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என்னுடைய மனைவிதான் – நான் […]

Today School leave | பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் […]

TTV Dinakaran’s Plan | தேசிய ஜனநயாக கூட்டணிக்கு ஆதரவா? இல்லையா?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளரான டிடிவி தினகரன் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார். தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அவர் அதே கூட்டணியில் இருக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்காக பணியாற்றுவோம் என பாஜகவிடம் உறுதி கொடுத்து பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அதிமுகவில் இருந்து 5 ஆவது […]

MK Stalin Campaigns | திக்கட்டும் உதயசூரியன்

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிட மாடலின் சாதனைகள், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள், அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி, துணிச்சல் இதுதான் தி.மு.க. என குறிப்பிட்டுள்ளார்.

TVK Meeting salem | தவெக சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் சார்பாக சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் தாளமுத்து நடராஜன் மைதானத்தில் நாளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய்யும் கலந்துக்கொள்ள உள்ளதால், இதற்காக ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் தவெக கூட்டம் நடக்கவுள்ள இடத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், சேலத்தை பொறுத்தவரைக்கும் இந்த மாவட்டம் பிரிப்பதற்கு முன்பாக மாங்கனி மாவட்டம் என […]

Spain train accident | ஸ்பெயின் ரயில் விபத்து

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினின் மலகா பகுதியில் இருந்து அந்நாட்டின் தலைநகர் மாட்ரிட் நோக்கி அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் 300க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோர்டோபா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயில் திடீரென தடம்புரண்டு அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்திற்கு சென்றது.அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால், ரயில் பெட்டிகளுக்குள் பயணிகள் சிக்கிக்கொண்டு […]

social media restrictions | கர்நாடக அரசு அதிரடி

கர்நாடகா மாநிலத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த அம்மாநில முதல்வர் சித்தராமையா தடை விதித்து உள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் உரையின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். சிறுவர் மற்றும் இளைஞர்களின் மனநலம், கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் படிப்பிலும், மனநிலையிலும் பாதிப்பை […]

Pakistan earthquake | காலையில் நிலநடுக்கம்

வடக்கு பாகிஸ்தானில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4. ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.புர்ஹானின் வடகிழக்கில் 11 கி.மீ. தூரத்திலும், 14 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் உணரப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மாநிலத்தில் 5.9 […]

idiyappam vendors | உணவு பாதுகாப்புத் துறை

உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை உணவு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இடியாப்பம் விற்கும்போது கையுறை, தலையுறை அவசியம். உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Gold rate today | தங்கம் விலை உயர்வு

தமிழ்நாட்டில் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனையானது.இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தக்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தூய […]

Tenkasi oldlady suffers | கனமழையால் இடிந்த சுவர்

வடகிழக்கு பருவமழையால் வீட்டை இழந்த மூதாட்டி தவெக மாவட்ட செயலாளர் நேரில் சென்று உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது .இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் சில இடங்களில் வீடுகளும் சேதமடைந்தது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வி கே புதூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கனமழை வெளுத்து […]

Vadivelu fires youtubers

Youtubers-க்கு ஆப்பு அடிக்கணும் – வடிவேலு ஒரு 10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். அதை நடிகர் சங்கம் தடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69ஆவது பொதுக்குழு கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 21) நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசுகையில், ” நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக்கொண்டு நமது […]

TN Weather update | வானிலை மையம் தகவல்

சென்னையில் பெய்து வரும் பரவலான மழை மற்றும் கடுங்குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததுஇந்நிலையில், சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட […]

Hockey world cup | ஹாக்கி உலகக் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்டம் ஹாக்கி உலகக் கோப்பை காட்சிப்படுத்துதல் மற்றும் வழிய அனுப்பி வைத்த விழா திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல் முறையாக நமது தமிழ்நாட்டில் 14 வது எஃப் ஐ எச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் ஆண்கள் வருகின்ற 28.11.2025 முதல் தொடங்கி 10.12.2025 வரை எஸ் டி ஏ டி எம் ஆர் கே ஆக்கி விளையாட்டு அரங்கம் சென்னையிலும் மற்றும் எஸ் […]

Thirumavalavan speech | திருமாவளவன் காட்டம்

திமுகவோடு பேரம் பேசும் கட்சி அல்ல நாங்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்பதை முதன்முதலில் முன்வைத்தது விசிக தான். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான காலம் கனியவில்லை. இருந்தாலும் அதிகாரப்பங்கு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார் திருமாவளவன். தொடர்ந்து அவர் பேசுகையில், எங்களுடைய கருத்துக்களை உரிமையோடு பகிர்ந்துள்ளோம். நாங்கள் பேரம் பேசவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மோடியின் வித்தை […]

DMK VS Congress | காங்கிரஸுக்கு அடி

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்த கொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர், “சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் எங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் 12 சதவீதம் தான். தமிழக மக்கள் மனதில் என்ன உள்ளது என்று எடுத்து கணக்கெடுப்பில் திமுக கூட்டணி வெல்லும் என தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டிற்கும், திமுக அரசிற்கும் குடைச்சல் கொடுப்பதில் மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி […]

railway hikes fare | ரயில் டிக்கெட் உயர்வு

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் டிசம்பர் 26 முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. 215 கி.மீ தூரத்திற்கு மேல் பயணிப்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. 215 கி.மீ-க்கும் குறைவான தூரம் பயணிப்போருக்குக் கட்டண உயர்வு இல்லை. மின்சார ரயில்கள் (Suburban trains) மற்றும் புறநகர் ரயில் பயணங்களுக்குக் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புகள்: 215 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் சாதாரண வகுப்புகளில் கி.மீ-க்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ வரை: […]

gaganyaan-mission | இஸ்ரோ அறிவிப்பு

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக சண்டிகரில் நடைபெற்ற பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளது. விண்கலம் பூமிக்கு திரும்பும்போது அதன் வேகத்தை குறைக்கும் பாராசூட்டுகள் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. சண்டிகரில் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் பாதையில் ராக்கெட் ஸ்லெட் வசதியில் சோதனை நடத்தப்பட்டது.

Cyclone Ditwah alert | அச்சுறுத்தும் டிட்வா புயல்

வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா ,சென்னை நகர், புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், காரைக்காலில் 5ம் எண் புயல் சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. நாளை மறுதினம் டிட்வா புயல் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இன்று தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை என 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 13 […]

Postal Vote counting process | தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை

தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் எண்ணப்படும் முறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் அனைத்துச் சுற்றுகளும் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி: வாக்குப்பதிவு இயந்திரத்தின் இறுதிக்கு இரண்டு சுற்றுகளுக்கு முன்பாக, அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு தொகுதியில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை இருந்தால், […]

today weather update | வானிலை மையம் தகவல்

மார்ச் 4-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புஎன வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய […]

PM Modi in Trichy | டிரோன்கள் பறக்க தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் நாளை (பிப்.11) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Today Weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மார்ச் 1-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கிழக்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு […]

Today weather update | வானிலை மையம்

டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, […]

TVK Vijay speech | எம்.ஜி.ஆர் சொன்னா மாதிரி

திமுக ஒரு தீய சக்தி, தவெக தூய சக்தி என ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தில் தவெக விஜய் தெரிவித்துள்ளார். ஈரோடு பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய், நான்கூட யோசிப்பேன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒரே வார்த்தைச் சொல்லி திமுகவை காலி செய்தார்கள். அப்போது ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறார்கள் என்று யோசித்தேன்.இப்போதான் புரிகிறது. அவர்கள் கூறியதை நான் மீண்டும் கூறுகிறேன். திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி…. தவெக ஒரு தூய […]

ADMK EPS Condemns | எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று தமிழகத்தில் அந்த வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய […]

Pazhani Mahalaya amavasai

மஹாளய அமாவாசை – புனித நீராடும் நதியின் அவல நிலை மஹாளய அமாவாசையை முன்னிட்டு பழனியில் தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் ஆற்றங்கரை சுகாதாரமற்று இருந்ததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்வது வழக்கம். அதிலும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவதை மக்கள் ஐதீகமாக கொண்டுள்ளனர். அதிலும் புராட்டசி அமாவாசை என்றால் கூடுதல் சிறப்பு உண்டு. அந்த வகையில் இன்று […]

Annamalai explains | அண்ணாமலை விளக்கம்

விஜய் தரப்போடு கூட்டணி பேச்சுவார்த்தையே நடக்கவில்லைஎன அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். பாஜக முன்னாள் மாநில அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, ‘விஜய் அவர்களுடனான கூட்டணியை பொறுத்தவரைக்கும் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக சொல்லிவிட்டார். யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி அண்ணன் சொன்னதுடன் முடிந்து விட்டதாகவே நாங்கள் பார்க்கிறோம். தவெக ஆன்லைன் மீட்டிங் நடத்தியது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கூட்டணியின் தலைவராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் வேட்பாளர் அவர்தான். அவருடையே கருத்தே […]

ADMK Election manifest | அதிமுக முக்கிய அறிவிப்பு

அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு முன்னதாகவே 5 வாக்குறுதிகளை அளித்திருந்தார் இந்நிலையில் மீண்டும் 5 வாக்குறுதிகளை வழங்கி உள்ளார். இதில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், முதியோருக்கு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 1200 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும். கல்வி கடனை ரத்து செய்வோம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். தமிழர்களின் […]

Heavy rain flood | கனமழை,வெள்ளம்

ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில் உள்ள இந்த 3 நாடுகளிலும் மொத்தம் 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும், ஜிம்பாப்வேயில் 70 பேரும், மொசாம்பிக்யூவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்த […]

Vijay Trisha issue | விஜய் திரிஷா உறவு

பிப்ரவரி 2026-இல் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியது பரபரப்பை அதிகரித்தது. சங்கீதா மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் குற்றம்சாட்டியதால், பலரும் திரிஷாவுடன் தொடர்புபடுத்தினர்.இதனிடையே, சென்னையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜயும் திரிஷாவும் ஒரே காரில் வந்து ஜோடியாக பங்கேற்ற வீடியோ வைரலானது. இது ரசிகர்களிடையே அதிருப்தியையும், சர்ச்சையையும் தீவிரப்படுத்தியது. சில நடிகைகள் சங்கீதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். கணவருக்கு நடிகையுடன் தொடர்பு என மனைவி கூறிவிட்டார். அது […]

Thirumavalavan about admk | அதிமுக மெல்ல மெல்ல

ர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் படத்தை இபிஎஸ் பதிவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அதிமுக காவி […]

TVK Ajitha Agnel | அஜிதாவின் விபரீத முடிவு

தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெண்கள் அணி நிர்வாகி அஜிதா ஆக்னல், கட்சி பொறுப்பு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். கட்சி தொடங்கிய காலம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக உழைத்து வந்த அஜிதா, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கக்கோரி பனையூர் தலைமை அலுவலகத்தில் விஜயின் காரை மறித்து போராட்டம் நடத்தியிருந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று தெரிகிறது. தற்போது […]
error: Content is protected !!