உண்மையின் உறைவிடம்…

டுடே டிரெண்டிங்248 Videos

Pazhani Mahalaya amavasai

மஹாளய அமாவாசை – புனித நீராடும் நதியின் அவல நிலை மஹாளய அமாவாசையை முன்னிட்டு பழனியில் தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் ஆற்றங்கரை சுகாதாரமற்று இருந்ததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்வது வழக்கம். அதிலும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவதை மக்கள் ஐதீகமாக கொண்டுள்ளனர். அதிலும் புராட்டசி அமாவாசை என்றால் கூடுதல் சிறப்பு உண்டு. அந்த வகையில் இன்று […]

PM Modi Greets | பிரதமரின் புகழாரம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் என் மனதில் நிற்கும் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அவரின் தேசப்பக்தி மிகப்பெரியது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ந் தேதி அவரது பிறந்தநாள் […]

PM Modi in Trichy | டிரோன்கள் பறக்க தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் நாளை (பிப்.11) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என […]

PM Modi speaks | நெருங்கிய உறவு

இந்தியா, மலேசியாவுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான வரலாற்று உறவுகள் சமீப ஆண்டுகளில் உறுதியான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான எனது பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நமது விரிவான மூலோபாய பங்களிப்பை நாம் மேலும் வலுப்படுத்துவோம் என கூறினார். மேலும்இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, பொருளாதாரம் மற்றும் புத்தாக்கத்தில் பங்களிப்பை மேம்படுத்தவும், நமது ஒத்துழைப்பை […]

PM modi speaks about GST | ஜிஎஸ்டி யில் அடுத்த மாற்றம்

ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்கள் மேலும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் […]

PM Modi Speaks essentials

பிரதமர் மோடி சொன்ன குட் நியூஸ்..! நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது . வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு […]

PMK Ramadoss cries | கண்கலங்கிய ராமதாஸ்

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “இந்த பொதுக்குழு, செயற்குழு 27 தீர்மானங்களை நிறைவேற்றிருக்கிறோம். இந்த நேரத்தில் எதை பேசி எதை விடுவது என்று எனக்குள் ஒரு குழப்பம் இருக்கிறது. ஏனென்றால் எனக்கு இருக்கின்ற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு மணி நேரம் தேவை. நான் இடையில் இடையில் பேசியிருக்கலாம். ஆனால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கேட்டுக் கொண்டிருந்தேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை எப்போது நான் […]

PMK Ramadoss cries | கண்கலங்கிய ராமதாஸ்

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “இந்த பொதுக்குழு, செயற்குழு 27 தீர்மானங்களை நிறைவேற்றிருக்கிறோம். இந்த நேரத்தில் எதை பேசி எதை விடுவது என்று எனக்குள் ஒரு குழப்பம் இருக்கிறது. ஏனென்றால் எனக்கு இருக்கின்ற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு மணி நேரம் தேவை. நான் இடையில் இடையில் பேசியிருக்கலாம். ஆனால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கேட்டுக் கொண்டிருந்தேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை எப்போது நான் […]

pmmodi welcomes uae | ஆரத்தழுவி வரவேற்பு

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். புது டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அமீரக அதிபரை மரபுப்படி வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான இந்த சந்திப்பு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் பதட்டங்கள் அதிகரித்து […]

Postal Vote counting process | தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை

தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் எண்ணப்படும் முறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் அனைத்துச் சுற்றுகளும் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி: வாக்குப்பதிவு இயந்திரத்தின் இறுதிக்கு இரண்டு சுற்றுகளுக்கு முன்பாக, அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு தொகுதியில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை இருந்தால், […]

President murmu approves | அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விபி-ஜி ராம் ஜி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். லோக்சபா, ராஜ்யசபாவில் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்ட மசோதாவிற்கு(VB-G RAM-G) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.நாடாளுமன்றத்தின் இரு […]

puducherry ration shop | இனி ரேஷன் கடைகளில்

புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கி வரப்படும் நிலையில் சத்துணவுக்காக ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார் புதுச்சேரியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிறுதானிய வகையை சேர்ந்த கேழ்வரகு மாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. கேழ்வரகு கால்சியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்த ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது […]

Putin visit india | இந்தியா வரும் புதின்

ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் பயணமாக டிசம்பர் 4-ந்தேதி இந்தியா வர உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது, ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், இந்தியக் குடியரசுத் தலைவரும் புடினை வரவேற்று, விருந்து அளிக்கவுள்ளார். புடினின் இந்தப் பயணம், இந்தியா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையை அமைக்கவும், பரஸ்பர நலன் […]

Rahul gandhi angry | பாரத மாதாவையே

நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சங்னகளை முன்வைத்துள்ளார். அப்போது, “அமெரிக்க அதிபட் டிரம்ப், கழுத்தை நெரிப்பதால் நாட்டையே அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார் மோடி. இந்திய தரவுகளை அமெரிக்கா எடுத்துக்கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என மோடிக்கு தெரியவில்லை” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய ராகுல் காந்தி , பிரதமர் மோடி நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு […]

Rahul Gandhi congress | ராகுல் காந்தியின் முடிவு

ஜனவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், இதனை ஒருங்கிணைப்பதற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்முன்னாள் மாநில தலைவர்களான கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசு, கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். […]

railway hikes fare | ரயில் டிக்கெட் உயர்வு

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் டிசம்பர் 26 முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. 215 கி.மீ தூரத்திற்கு மேல் பயணிப்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. 215 கி.மீ-க்கும் குறைவான தூரம் பயணிப்போருக்குக் கட்டண உயர்வு இல்லை. மின்சார ரயில்கள் (Suburban trains) மற்றும் புறநகர் ரயில் பயணங்களுக்குக் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புகள்: 215 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் சாதாரண வகுப்புகளில் கி.மீ-க்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ வரை: […]

railway hikes fare | ரயில் டிக்கெட் உயர்வு

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் டிசம்பர் 26 முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. 215 கி.மீ தூரத்திற்கு மேல் பயணிப்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. 215 கி.மீ-க்கும் குறைவான தூரம் பயணிப்போருக்குக் கட்டண உயர்வு இல்லை. மின்சார ரயில்கள் (Suburban trains) மற்றும் புறநகர் ரயில் பயணங்களுக்குக் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புகள்: 215 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் சாதாரண வகுப்புகளில் கி.மீ-க்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ வரை: […]

Rajbhavan name changed | ராஜ்பவன் பெயர் மாற்றம்

ராஜ் பவன் என இருந்த பெயர் லோக் பவன் (மக்கள் பவன்) என மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள் ‘ராஜ் பவன்’ என அழைக்கப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை ‘ராஜ் நிவாஸ்’ என அழைக்கப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாகவே கூறி […]

Red alert districts | வெளியே வர வேண்டாம்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இன்று (நவ.29) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி, ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்டும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல, நாளை (நவ.30) திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலர்டும்; சென்னை, காஞ்சிபுரம், […]

Redhills rain rescue | படகு மூலம் மீட்பு

செங்குன்றம் அருகே மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மக்களை தீயணைப்பு துறையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர். சென்னை செங்குன்றம் அடுத்த நியூ சன் கார்டன் இரண்டாவது பிரதான சாலை பாலவாயில் பகுதியில் வீட்டில் மழை நீர் புகுந்ததால் வெளியில் வர முடியாமல் அவதிக்குவுள்ளாகி இருந்தனர். இதனை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த பச்சையப்பன் […]

Same date birthday | கடலூரில் ஒரு அதிசயம்

கணவன் – மனைவி இருவரும் ஒரே பிறந்த நாளை கொண்டிருந்த நிலையில் பிறந்த குழந்தையும் அதே நாளில் பிறந்து அசத்தியத்துடன் தந்தை பிறந்த அதே கிழமை மற்றும் நட்சத்திரம் ரத்த வகை என அனைத்திலும் ஒற்றுமையாகஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் துரைசாமி நகர் பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் – சுபாஶ்ரீ தம்பதிகள் இருவரும் 22 ம் தேதியை பிறந்த நாளாக கொண்டவர்கள். இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தையும் தற்பொழுது டிசம்பர் 22ஆம் தேதியே பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். […]

Sasikala New party | சசிகலா கட்சியின் சின்னம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, தமிழக அரசியல் களத்தில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.சசிகலா தலைமையிலான கட்சியின் பெயர் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ (அஇபுதமமுக) என்பதாகும்.வரும் சட்டசபை தேர்தலில் இந்தக் கட்சி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

Savukku shankar arrest | போலீஸின் செயல்

சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை வீட்டின் கதவை உடைத்து ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கைதும் செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.இந்நிலையில், அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா கடந்த […]

seeman condemns thirumavalavan | திருமாவை சாடிய சீமான்

என்னையும், விஜயையும் பா.ஜ.க. பெற்றெடுத்தபோது அவர்தான் பிரசவம் பார்த்தார் என திருமாவளவனுக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில் பேசிய சீமான்,என்னையும், தம்பி விஜய்யையும் பற்றி ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என எனது அண்ணன் திருமாவளவன் கூறி இருக்கிறார். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் எங்களை பெற்றெடுத்த போது அவர்தான் அருகில் இருந்து பிரசவம் […]

Seeman latest speech | நாம் தமிழர் சீமான்

எனக்கும், என் கொள்கைக்கும் யாரும் போட்டியில்லை என சீமான் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருவர் இருமொழி கொள்கை என்பார், ஒருவருக்கு கொள்கை என்றால் என்னவென்றே தெரியாது. கூட்டணி அமைப்பவர்களுக்கு கொள்கை இல்லை, சீட்டுகள் மட்டுமே இலக்கு. சீமானுக்கு வாக்களித்தால் பாஜக ஆட்சிக்கு வந்து விடும் எனக் கூறுகிறார்கள். இவர்களுக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என சொல்வதற்கு ஒரு ஆட்சியா? ஒரு தலைவரா?. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு […]

sellurraju slams | முக்கிய புள்ளி சாடல்

வீட்டில் ஒரு ஓட்டு உள்ளது என்று விஜய் வாயில் வடை சுடுகிறார் என செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , “திமுக பலம் பொருந்திய கூட்டணி என்று முதல்வர்தான் சொல்கிறார். காங்கிரஸ், ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும் கேட்கின்றது. ஊழலை ஒழிப்பேன், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று சொல்லி டிவியை உடைத்தவர் கமல்ஹாசன். அரசியலில் உலகநாயகனாவார் என்று நினைத்தால் நகைச்சுவை நடிகராகிவிட்டார் […]

selvaperundhagai byte | செல்வப்பெருந்தகை பேட்டி

திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம் என செல்வப்பெருந்தை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது, முடிந்த பிறகு உங்களிடம் அறிவிப்போம்” என்று தெரிவித்தார். இதனிடையே, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “அவர்கள் (காங்கிரஸ்) கேட்பது வேறு, நாம் (திமுக) சொல்வது வேறு. திமுக – காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தை சுமுகமாக முடிக்கவே […]

sengottaiyan joins TVK | செங்கோட்டையனுக்கு பதவி

செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; 2026 -ல் தவெக தலைவர் விஜயை மக்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு ‘தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியை அறிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்; தாம் சார்ந்திருந்த கழகத்தின் […]

Sengottaiyan press meet | செங்கோட்டையன் பேட்டி

அதிமுகவில் ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காது என்று தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தவெகவால் காங்கிரஸ் கட்சிக்கு பயன் கிடைத்துள்ளது. என்டிஏ கூட்டணியாக இருந்தாலும், திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி.. எங்களை காட்டி கூடுதல் சீட்டு பெறும் என்ற நிலை உள்ளது. எங்களை காட்டி கூடுதல் சீட்டுகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. தவெக தனித்துப் போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அதேபோல் ஜெயக்குமாருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப் போவதில்லை.. அவர் வேண்டுமானால் தவெகவுக்கு தாராளமாக […]

Sengottaiyan speech | செங்கோட்டையன் உறுதி

தமிழக வெற்றிக் கழக மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதாக மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் தவெகவில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் தவெகவுக்கு வரவேற்பு இருக்கிறது. தவெக மற்றொரு அதிமுகவாக மாறும். இனிமேல் அதிமுக கிடையாது’’ என்றார்.

Sengottaiyan speech | செங்கோட்டையன் விளக்கம்

விஜய் துண்டுச் சீட்டைப் பார்த்துப் பேசுவது குறித்து எழுந்த விமர்சனத்தை, அரசியல் நடைமுறையின் ஒரு சாதாரண அம்சமாக மாற்றிப் புரியவைத்திருக்கிறார் செங்கோட்டையன். இது தேர்தலை முன்னிட்டு உருவாகும் புதிய அரசியல் விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது.அவர் கூறுகையில், அரசியல் மேடைகளில் முக்கியமான தரவுகள், புள்ளிவிவரங்கள், திட்ட அறிவிப்புகள் போன்றவற்றை பேசும் போது குறிப்புகளைப் பார்த்து பேசுவது சாதாரணமான விஷயமே எனத் தெரிவித்தார். “பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரை பல முக்கிய தலைவர்கள் […]

Sengottaiyan speech | விஜய் தான் ஹீரோ

விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர். அதனை யாராலும் மாற்றிக் காட்ட முடியாது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திரைப்படத்தில் அவர் ஹீரோ. எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அரசில் ஹீரோவாகவும் அவர்தான் வரப்போகிறார். அதனை யாராலும் மாற்ற முடியாது.பணம் இல்லாமலேயே வெற்றிபெறக்கூடிய இயக்கம் தான் நம்முடைய தளபதி இயக்கம். எங்கே சென்று கேட்டாலும் அவருக்குத்தான் ஓட்டு. நேற்றைய பாஜக 5 லட்சம் பேர் வருவார்கள் என்று சொன்னார்கள், ஆனால் 60 ஆயிரம் சேர் தான் போட்டார்கள். […]

Shikhar dhawan engagement | ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை பிப்ரவரி மாதம் திருமணம் செய்யவுள்ளார். இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனியார் நிகழ்வாக நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் துபாயில் சந்தித்த இவர்களுக்கு இடையே முதலில் நட்புறவு மலர்ந்து, பின்னர் காதலாக மாறியது. 2025 மே மாதம் சமூக வலைத்தளங்கள் […]

Shimla snow rain | கடும் பனிப்பொழிவு

இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் இன்று அடர்த்தியான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மலைச் சிகரங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் பனிப் போர்வையைப் போர்த்தியது போன்ற கண்கவர் காட்சியால், அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வரும் நாட்களில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sikkim today earthquake | அடுத்தடுத்து நிலநடுக்கம்

சிக்கிமில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சிக்கிமில் கியால்ஷிங் மற்றும் மங்கன் பகுதிகளில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில், சிக்கிமின் கியால்ஷிங் பகுதியில் இன்று காலை 11.34 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிக்கிமின் மங்கன் பகுதியில் மதியம் 12.17 மணியளவில் ரிக்டர் 3.5 […]

SIR Forms Uploaded | படிவங்கள் பதிவேற்றம்

தமிழகத்தில் விநியோகிக்கப்பட்ட 100% SIR படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடந்த நிலையில், எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 6.41 கோடி (6,41,14,587) வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட 6,40,84,624 கணக்கீட்டுப் படிவங்களில் நேற்றுவரை 6,38,25,877 (99.55%) படிவங்கள் பதிவேற்றப்பட்டன. இந்த நிலையில், இந்தியத் தேர்தல் […]

Sivagangai bus incident | சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகானந்தா பாலிடெக்னீக் கல்லூரி அருகே காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் எட்டுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு […]

Smirit Mandana | ஸ்மிருதி மந்தனா அசத்தல்

மகளிர் அணியின் பேட்டர் தரவரிசையை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டைப் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 790 ரேட்டிங் புள்ளிகளுடன் தற்போது உலகின் சிறந்த பேட்டராகத் திகழ்கிறார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவர் அரைசதம் விளாசி அசத்தியது, இந்த தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.கடந்த 2025-ம் ஆண்டு முழுவதும் சிறப்பான […]

social media restrictions | கர்நாடக அரசு அதிரடி

கர்நாடகா மாநிலத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த அம்மாநில முதல்வர் சித்தராமையா தடை விதித்து உள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் உரையின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். சிறுவர் மற்றும் இளைஞர்களின் மனநலம், கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் படிப்பிலும், மனநிலையிலும் பாதிப்பை […]

Spain train accident | ஸ்பெயின் ரயில் விபத்து

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினின் மலகா பகுதியில் இருந்து அந்நாட்டின் தலைநகர் மாட்ரிட் நோக்கி அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் 300க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோர்டோபா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயில் திடீரென தடம்புரண்டு அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்திற்கு சென்றது.அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால், ரயில் பெட்டிகளுக்குள் பயணிகள் சிக்கிக்கொண்டு […]

Speaker ombirla | ஓம் பிர்லா அதிர்ச்சி

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றாத நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் மோடியை தாக்க சதி நடந்ததாகவும், எனவேதான் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக விளக்கமளித்துள்ளார்.மக்களவையில் ராகுல் காந்தி, சீன விவகாரம், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை […]

Srilanka ditwa cyclone | தமிழக அரசு நிவாரணம்

இலங்கையில் இதுவரை இல்லாத வகையில், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வந்ததால் கனமழையால், வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர்.கனமழையால் தொடர்ச்சியாக 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து விட்டன. 1.08 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 2.19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் […]

srilanka emergency declared | அவசரநிலை பிரகடனம்

இலங்கையில், டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து அதிபர் அநுர குமார திசநாயக அறிவித்துள்ளார். இலங்கையில், வரலாறு காணாத கனமழை பெய்ய காரணமான டிட்வா புயல் இன்று (நவ. 29) காலை அந்நாட்டின் எல்லையைக் கடந்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது.இந்த நிலையில், இலங்கையின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் உடனடியாக “அவசரநிலை” அறிவிக்க வேண்டுமென அதிபர் […]

Srilanka flood death | சுழற்றி அடிக்கும் வெள்ளம்

இலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளநீரில் வீடுகள் மூழ்கியதால் பலர் கூரைக்கு ஏரிச்சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர்களில் சென்று மக்களைக் காப்பாற்ற முயல்கின்றன. 17 வட்டாரங்களிலிருந்து கிட்டத்தட்ட 6,000 பேர் அரசாங்க அவசரகாலக் கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கடலோரப் பகுதிகளில் வசிப்போரை உடனடியாக வெளியேறி பத்திரமான இடங்களுக்குச் செல்லுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பல இடங்களில் பாறைகள், மண், மரங்கள் ஆகியவை சரிந்து […]

sunita-williams-retires | அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாசாவில் 27 ஆண்டுகள் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மிக முக்கியமான விண்வெளி வீராங்கனைகளில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால விண்வெளிப் பயணத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த, டிசம்பர் 27, 2025 முதல் இவரது ஓய்வு அமலுக்கு வந்ததாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் […]

sweet news for ladies | அமைச்சர் அதிரடி

பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. 1.37 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் முடிவதற்குள் இனிப்பான செய்தி வரும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியிருப்பதால், மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்பட இருக்கிறதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி துறையின் கீழ் மகளிர் சுயஉதவி […]

Tamilnadu assemble date | கவர்னர் உரை நிகழ்த்துகிறார்

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன. 20-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார். நாங்கள் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். கவர்னர் சட்டசபையின் மாண்பை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். […]

Tamilnadu election date | சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.அசாம் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்கேரளா சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் […]

Tamilnadu governor | பொறுப்பு ஆளுநர்

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பொறுப்பு ஆளுநராக அர்லேகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Tamilnadu Heavy rain | தமிழகத்துக்கு வரும் கனமழை

தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனிடையே, இன்று […]

Tamilnadu hindu religious | பாஜகவை மிஞ்சும் அறநிலையத்துறை

கடந்த 2014 முதல் இந்தியாவை ஆண்டு வரும் பாஜக, ஒரு மதவாத கட்சி என்றே பார்க்கப்படுகிறது. பாஜகவின் செயல்பாடு இந்துக்களுக்கு ஆதரவாகவும், மற்ற மதத்தினருக்கு எதிராக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் பாஜகவின் அரசியல் செயல்பாடு ஏற்று கொள்ளப்பட்டாலும் திராவிட கட்சிகள் ஆளும் தமிழகத்தில் பாஜகவின் இந்துத்துவா என்ற திட்டம் இதுவரை ஏற்று கொள்ளப்படவில்லை. இந்துக்களுக்காக மட்டுமே பாஜக செயல்பட்டு வருகிறது என்ற நிலை இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவை மிஞ்சும் அளவிற்கு தமிழ்நாடு இந்து […]

Tamilnadu voter list | வாக்காளர் வரைவு பட்டியல்

எஸ்.ஐ.ஆருக்கு பின் தமிழ்நாட்டில் மொத்தமாக 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின்பு 5.43 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.61 லட்சம் பேர் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,191 வக்காளர்கள் இருக்கிறார்கள். ஆண் வாக்காளர்கள் 2,66,63,233 பேரும் பெண் வாக்காளர்கள் 2,77,06,332 பேரும் உள்ளனர். மொத்தமாக வரைவு வாக்காளர் […]

Tenkasi oldlady suffers | கனமழையால் இடிந்த சுவர்

வடகிழக்கு பருவமழையால் வீட்டை இழந்த மூதாட்டி தவெக மாவட்ட செயலாளர் நேரில் சென்று உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது .இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் சில இடங்களில் வீடுகளும் சேதமடைந்தது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வி கே புதூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கனமழை வெளுத்து […]

Thailand tiger death | புலிகள் உயிரிழப்பு

தாய்லாந்தின் ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த 2 வாரங்களில் 72 புலிகள் ‘கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்’ தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக வேகமாக பரவும் இந்த வைரஸ் பாதிப்பால் அந்நாட்டின் சுற்றுலா துறை முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து, தொற்று மேலும் பரவாமல் தடுக்க பூங்கா நிர்வாகம் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேளை முன்னர் 2004 ஆம் ஆண்டு சோன்புரி மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில் பறவைக் […]

Thakkaar book launch | உள்ளதை உள்ளபடி

ஒருங்கிணைந்த குடும்ப உறவுகளின் குரலாக ஒலிக்க தொடங்கிய தக்கார்…! சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தக்கார் குரல் மாத இதழ் வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தி நாளான கடந்த 2 ஆம் தேதி நேற்று முன்தினம் நடைபெற்றது. தக்கார் குரலின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான யூசுப் பாஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பா.ஜோதிமணி, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் துணை ஆட்சியர் டீ.முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ம.வீ.ராஜதுரை, சென்னை பத்திரிக்கையாளர் […]

Thirumavalavan about admk | அதிமுக மெல்ல மெல்ல

ர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் படத்தை இபிஎஸ் பதிவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அதிமுக காவி […]

Thirumavalavan speech | திருமாவளவன் காட்டம்

திமுகவோடு பேரம் பேசும் கட்சி அல்ல நாங்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்பதை முதன்முதலில் முன்வைத்தது விசிக தான். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான காலம் கனியவில்லை. இருந்தாலும் அதிகாரப்பங்கு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார் திருமாவளவன். தொடர்ந்து அவர் பேசுகையில், எங்களுடைய கருத்துக்களை உரிமையோடு பகிர்ந்துள்ளோம். நாங்கள் பேரம் பேசவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மோடியின் வித்தை […]

thiruparankundram-sikandar-dargah | வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா, பெரியவீதி பள்ளிவாசல் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மதுரை மாநகர் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சிக்கந்தர் தர்கா மற்றும் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு […]

tibetan spritual leade | தலாய் லாமாவுக்கு விருது

2026-ம் ஆண்டுக்கான 68-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்று (பிப்ரவரி 1) அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றுள்ளார். தி ரிஃப்ளெக்ஷன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா’ என்ற அவருடைய ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது. திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.அவர் […]

Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன்

Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன் சிறப்பு வாய்ந்த சூரசம்ஹாரம் கும்பாபிஷேகத்திற்கு பிறகு திருச்செந்தூரில் நடைபெறும் முதல் சூரசம்ஹாரம்“ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்” அறுபடை வீட்டின் நாயகனான முருக பெருமான் அருள்கிடைத்தால் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி என பல கோடி பக்தர்கள் தமிழ் கடவுளான முருக பெருமானை வழிபட்டு வருகின்றனர். தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு பல்வேறு இடங்களில் கோயில்களும், அந்த கோயில்களுக்கு என்று தனிக்கதை இருந்தாலும் முருக பெருமான் என்றாலே அனைவரின் […]
error: Content is protected !!