உண்மையின் உறைவிடம்…

டுடே டிரெண்டிங்248 Videos

football-legend-ronaldo | கால்பந்து ஜாம்பவான்

ஹாலிவுட்டில் கார் ரேஸிங்கை வைத்து இயக்கப்பட்ட பிரபலமான திரைப்பட சீரீஸ் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன. இதற்கென உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இதன் 11வது மற்றும் கடைசி பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படம் தற்போது உருவாகி வருகிறது. 2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த கடைசி பாகத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோ இணைந்துள்ளார். இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு […]

gaganyaan-mission | இஸ்ரோ அறிவிப்பு

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக சண்டிகரில் நடைபெற்ற பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளது. விண்கலம் பூமிக்கு திரும்பும்போது அதன் வேகத்தை குறைக்கும் பாராசூட்டுகள் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. சண்டிகரில் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் பாதையில் ராக்கெட் ஸ்லெட் வசதியில் சோதனை நடத்தப்பட்டது.

Gas cylinder crisis | இந்தியன் ஆயில் அறிவிப்பு

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் எதிரொலியாக சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பல்வேறு நகரங்களில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது, சமையலுக்கு பயன்படும் எல்பிஜி என்னும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பிரித்தெடுக்கப்படுகிறது. தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கச்சா […]

Gas Cylinder issue | சிலிண்டர் இல்லை

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் எரிவாயு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. ஓட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி, ஃபிரைடு ரைஷ் உள்ளிட்டவை குறைப்பு, மூடப்படும் நிலை, மண்டபங்களில் திருமணங்களை நடத்துவதில் சிக்கல் என நெருக்கடி அதிகரித்து வருகிறது. படிப்படியாக நெருக்கடி அதிகரித்து 10, 15 நாட்களை தாண்டி விட்டால் வீட்டிற்கே சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.

Gas Cylinder issue | சிலிண்டர் சீக்கிரம் வரும்

10 நாட்களில் வணிக பயன்பாட்டிற்கான LPG சிலிண்டர் பிரச்சினை சரி ஆகும் என அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவையில் விளக்கமளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும். வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது. பெட்ரோல் டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை.போர் நீண்ட காலம் நீடித்தாலும், இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியும் விநியோக […]

Gas cylinder stopped | பாரத் பெட்ரோலியம் விளக்கம்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்துள்ள செய்திகளுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தில் தற்போது எந்த சிக்கலும் இல்லை என்றும், போதிய இருப்பு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சிலிண்டர் பதிவு செய்வதற்கான கால இடைவெளி மட்டும் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Gavaskar blasts pakistan

பாகிஸ்தான் மேல நடவடிக்கை எடுங்க – கோபப்பட்ட கவாஸ்..! மீடியா சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மேலும் இந்த ஆட்டம் துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இரு அணிகளின் கேப்டன்கள் அல்லது பயிற்சியாளர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டிக்கான […]

Goa Ramar Statue | கோவாவில் ராமர் சிலை

ஆசியாவிலேயே மிக உயரமான, 77 அடி வெண்கல ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ராமரின் 77 அடி வெண்கல சிலை நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை. பூஜைகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது. நாளை பிற்பகல் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார். […]

Gold Rate Rises

உச்சம் தொட்ட தங்கம் விலை..! ஒரு சவரன் ரூ..? தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது. நேற்று மட்டும் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது நகை பிரியர்களை அதிர வைத்தது. நேற்று தங்கம் விலை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு […]

Gold rate today | தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனையாகிறது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ. 14,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்த நிலையில் மாலையில் மாற்றமின்றி ரூ.280க்கு […]

Gold rate today | தங்கம் விலை உயர்வு

தமிழ்நாட்டில் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனையானது.இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தக்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தூய […]

gold rate today | மீண்டும் உயர்வு

இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனையாகி வருகிறது.தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் தினமும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு 10 ஆயிரம் […]

Heavy rain flood | கனமழை,வெள்ளம்

ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில் உள்ள இந்த 3 நாடுகளிலும் மொத்தம் 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும், ஜிம்பாப்வேயில் 70 பேரும், மொசாம்பிக்யூவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்த […]

Hockey world cup | ஹாக்கி உலகக் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்டம் ஹாக்கி உலகக் கோப்பை காட்சிப்படுத்துதல் மற்றும் வழிய அனுப்பி வைத்த விழா திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல் முறையாக நமது தமிழ்நாட்டில் 14 வது எஃப் ஐ எச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் ஆண்கள் வருகின்ற 28.11.2025 முதல் தொடங்கி 10.12.2025 வரை எஸ் டி ஏ டி எம் ஆர் கே ஆக்கி விளையாட்டு அரங்கம் சென்னையிலும் மற்றும் எஸ் […]

HRaja Hospitalized | ஹெச்.ராஜாவுக்கு என்னாச்சு

சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் […]

ICC T20 Worldcup | முக்கிய வீரர் இல்லை

10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன.இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் […]

idiyappam vendors | உணவு பாதுகாப்புத் துறை

உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை உணவு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இடியாப்பம் விற்கும்போது கையுறை, தலையுறை அவசியம். உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

idiyappam vendors | உணவு பாதுகாப்புத் துறை

உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை உணவு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இடியாப்பம் விற்கும்போது கையுறை, தலையுறை அவசியம். உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Indonesia Earthquake | இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவானது நிலநடுக்கத் தகவல் புல்லட்டின் படி, இந்த நிலநடுக்கம் 25 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது, அட்சரேகை 2.68°N மற்றும் தீர்க்கரேகை 96.07°E இல் ஆரம்ப ஆயத்தொலைவுகளுடன் உள்ளது. இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்ட தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம், இருப்பினும், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளது. எனினும், […]

iran launches drone | ஈரானின் ட்ரோன் தாக்குதல்

துபாய் விமான நிலையம் அருகே அதிகாலையில் நடந்த டிரோன் தாக்குதால் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. சவுதி, ஓமன், பஹ்ரைன், துபாய் என அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தாளங்களை குறிவைத்து, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை யு.ஏ.இ மீது ஈரான் 1,800க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; துபாய் […]

Iran war ship | ஐரிஸ் டெனா

இந்தியாவின் கடற்படை அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த ‘மிலன்-2026’ சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பலான ‘ஐரிஸ் டெனா’ வந்திருந்தது. பயிற்சி முடிந்து மார்ச் 4 அன்று இலங்கை அருகே இந்திய பெருங்கடலில்சென்றுகொண்டிருந்த ஐரிஸ் டெனாவை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.இந்தியாவின் விருந்தினராக சென்ற எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.இந்நிலையில் இந்த […]

iran warns america | ஈரான் எச்சரிக்கை

ஐரிஸ் டெனா போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-ஈரான் கடற்கரையில் இருந்து 2 ஆயிரம் மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது.கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஐரிஸ் டெனா போர்க்கப் பலை சர்வதேச கடல்பகுதியில் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் தாக்கி உள்ளது.எனது வார்த்தைகளை குறித்து […]

iran-revolutionary-guards | இஸ்ரேலில் தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் டெல் அவிவ் அலுவலகத்தின் மீது “திடீர் ஏவுகணை” தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் இன்று அறிவித்துள்ளன. இதனால் நெதன்யாகுவின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நேற்று முன் தினம் திடீர் தாக்குதலை நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவர் அயாத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நேற்று முன் தினம் […]

israel-pm-netanyahu | இஸ்ரேல் பிரதமர்

ஈரான் குடிமக்கள் தற்போதைய இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்தி தங்களை விடுவித்துக் கொள்ள முன்வர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “ ஈரானின் தைரியமான மக்களே, இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இது தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே வரும் வாய்ப்பு. உங்க வாழ்க்கையை கசப்பாக்கிய பயங்கரவாத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர லட்சக்கணக்கில் வீதிக்கு வாருங்கள். வரவிருக்கும் நாட்களில் ஆயிரக்கணக்கான இலக்குகளை […]

Jammu kashmir accident | ராணுவ வாகன விபத்து

ஜம்மு – காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் வியாழக்கிழமை பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டம், தனலாவில் உள்ள படேர்வா – சாம்பா சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 ராணுவ வீரர்கள் பயணித்த நிலையில், 10 வீரர்கள் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து படேர்வா மாவட்ட மருத்துவ அதிகாரி […]

Jayalalitha Assets | ஜெயலலிதாவின் சொத்துகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரியை செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.அதில், ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார். வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது என்றது.ரூ.13 கோடி வரி பாக்கியை செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பி நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதா, தீபக் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Karur stampede issue | தவெக விஜய் ஆஜர்

கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் மேற்கொண்ட விசாரணை நிறைவடைந்தது. இன்று விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக கரூர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வழங்கிய பதில்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தது. எனவே அதனை மையப்படுத்தி இன்று விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.விஜய்யிடம் […]

karur supreme court | உச்சநீதிமன்றம் வேதனை

பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுப்பது தொடர்பான வழக்கில், ‘மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி சூர்ய காந்த், ‘தங்களது அடிப்படை உரிமை எனக்கூறி டெல்லியில் போராட்டம் நடத்துவோரை, பள்ளி குழந்தைகள், நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறிப்பிட்ட இடத்தில் நடத்துமாறு நம்மால் நெறிப்படுத்த முடியும். ஆனால் சென்னையில் ஒரு பேரணி நடப்பதாக வைத்துக்கொள்வோம்; அங்குள்ள மைதானத்தில் 10,000 பேர் மட்டுமே கூட […]

Ladakh Statehood protest | லடாக்கில் வெடித்த வன்முறை

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 4 பேர் பலியாகினர். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சியை வழங்கும் 6வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து […]

Loksabha tamiliachi speech | தமிழச்சியின் வலியுறுத்தல்

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார். இது குறித்து பேசிய அவர், உலகில் முத்தழிழ் அறிஞர் கருணாநிதி போன்ற ஆளுமையை காண்பது அறிவு. மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். திராவிட மரபின் சாம்பியன் கருணாநிதி. சமூக நீதிக்கும், நல்லாட்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, ‘இவ்வுலகில் பல […]

Ma subramanian speech | சீனியாரிட்டி தான்

காலிப் பணியிடங்கள் உருவாகும்போது சீனியாரிட்டி அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், செவிலியர் பணியில் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே வழங்க முடியும். போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை ஆனால் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஒப்பந்த செவிலியர்களுக்கு பணியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசு யாரையும் கைவிடாது. 8 ஆயிரத்து மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

manipur violence | மணிப்பூரில் வன்முறை

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் டாங்குள் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். மணிப்பூரில் மீண்டும் வன்முறை காரணமாக உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக மணிப்பூரில் 2 நாட்களில் மட்டும் 30 வீடுகள் வரை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் […]

manjummal boys director | பாலியல் குற்றச்சாட்டு

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ். பொதுவாலுக்கு எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எலம்குளம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளார்.டைரக்டர் சிதம்பரம், தனது பிளாட்டில் புகுந்து பாலியல் நோக்கத்துடன் தவறாக நடந்து கொண்டதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் டைரக்டர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.சி. பிரிவு 74 மற்றும் […]

Meera mithun case | சென்னை உயர் நீதிமன்றம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக கூறி அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மீறி மிதுனுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு போலீசார் வழக்குப் […]

Messi event collapse | மெஸ்ஸி ரசிகர்கள் ஆத்திரம்

கொல்கத்தாவில் மெஸ்ஸியை காண முடியாத ரசிகர்கள், ஏமாற்றத்தால் ரகளையில் ஈடுபட்டனர். அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் கொல்கத்தாவில் அவரது சிலையை அவரே திறந்து வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து சால்ட் லேக் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் மெஸ்ஸி தோன்றுவார் என கூறப்பட்டு, அதற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து இருந்தது. சுமார் 4500 முதல் 12500 வரை விலை கொடுத்து அந்த டிக்கெட்களை […]

Mexico plane crash | மெக்சிகோ விமான விபத்து

மெக்சிகோவில் உள்ள சான் மேட்டியோ அட்டென்கோ என்ற இடத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது ஒரு தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி, ஏழு பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார். அதற்குள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்து, டோலுகா விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், […]

mexico train accident | ரயில் தடம் புரண்டது

மெக்சிகோ நாட்டின் ஒக்சாகா மற்றும் வெராகுரூஸ் மாகாணங்களுக்கு இடையே இண்டர்ஓஷெனிக் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பசிபிக் பெருங்கடலுடன் மெக்சிகோ வளைகுடாவை இணைக்கிறது. இந்த ரெயிலை கடந்த 2023-ம் ஆண்டு மெக்சிகோ முன்னாள் ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் திறந்து வைத்தார்.இந்த இண்டர்ஓஷெனிக் ரெயில் நிசாண்டா நகரத்தின் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் […]

Minister Amitshah plan | அமித்ஷாவின் வருகை

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா 2 நாள் பயணமாக திருச்சிக்கு இன்று வருகிறாா். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா, இரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் நாளை ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் செல்லும் அவர் அங்கு நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையடுத்து திருச்சி வரும் அமித் ஷா, தேர்தல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், […]

Minister sekarbabu assured | அமைச்சர் சேகர்பாபு உறுதி

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு வாக்குறுதி அளித்தார். சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை இன்று அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார்.இந்த நிகழ்வின் போது உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி […]

MK Stalin announced | முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!

விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மகளிருக்கு கலைஞர் பெயரால் வழங்கப்படும் உரிமைத் தொகை 1,000 ரூபாயை நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் வழங்கி கொண்டிருக்கிறோம். இந்நிலையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு 1,000 ரூபாயை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வந்தது. […]

MK Stalin announces | முதல்வர் முகஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ. 1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விடியோ வெளியிட்டு முதல்வர் பதிவிட்டிருப்பதாவது: ”தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க […]

MK Stalin Campaigns | திக்கட்டும் உதயசூரியன்

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிட மாடலின் சாதனைகள், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள், அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி, துணிச்சல் இதுதான் தி.மு.க. என குறிப்பிட்டுள்ளார்.

MK Stalin latest speech | என் வெற்றிக்கு பின்னால்

என் வெற்றிக்கு பின்னாலும் என் மனைவிதான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 18) சென்னை, கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருள்களை வழங்கி, உரையாற்றினார் அப்போது பேசிய அவர், ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் தான் இருக்கிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என்னுடைய மனைவிதான் – நான் […]

mk stalin speech | முதல்வரின் பேச்சு

டபுள் இஞ்சின் என்று சொல்லி வட மாநில மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற உங்கள் டப்பா இஞ்சின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.2021-ல் பெற்ற தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்காமல் மறுபடியும் கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து […]

MP Kanimozhi speech | திமுக எம்பி கனிமொழி பேச்சு

தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் என கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் பிரச்சினையை எழுப்பினோம். ஆங்கிலேயர்கள் வைத்த நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றச்சொல்கின்றனர். மக்களின் பக்தியை நிறுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.மதம்,பக்தியின் பெயரால் குளிர்காய நினைக்கிறது பாஜக. பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.திராவிட கட்சிகளின் மதப்பிரச்சினைகள் இல்லாத அமைதியான தமிழகமாக உள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்து கொள்ளவில்லை. திராவிட கட்சிகளின் ஆட்சியில் மதப்பிரச்சினைகள் இல்லாத அமைதியான […]

Naam thamizhar katchi | நாதக பொதுக்கூட்டம்

நாதக பொதுக்கூட்டம் டிச.27ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Nainar about sengottaiyan | அமைச்சரை சந்தித்தது ஏன்

அமைச்சர் சேகர் பாபுவை செங்கோட்டையன் சந்தித்தது ஏன்? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை (நவ. 27) அன்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அன்றைய செய்தியாளர் சந்திப்பில், “தமிழ்நாடு அரசியலில் மாற்றம் வேண்டும், தூய்மையான அரசியல் வேண்டும்” என்பதற்காக தவெகவில் இணைந்ததாகக் கூறியிருந்தார் செங்கோட்டையன். பாஜகவின் வழிகாட்டுதலில் தவெகவில் இணைந்தார் என திமுக கூட்டணி கட்சிகளும், […]

nallakannu passed away | மறைந்தார் போராளி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சமூக விடுதலை போராட்ட வீரருமான நல்லகண்ணு உடல் நலக்குறைவால் காலமானார். தோழர் இரா. நல்லகண்ணு கட்சியில் உறுப்பினராக சேரும் பொழுது கட்சிக்கு வயது 17.15 வயதிலேயே நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தெருக்களிலே இந்திய விடுதலைக்கு முழக்கமிட்ட சின்னஞ்சிறு இளைஞர். அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியாவிற்கு என்று விடுதலை வரும் என்ற தாகம் நெஞ்சிலே தேங்கிக் கிடந்த நேரம்… தன் வயதொத்த இளைஞர்களுடன் வீதிகளிலே மகாகவி பாரதியின் ‘என்று தணியும் இந்த சுதந்திர […]

Nurses demand ma subramanian | மா சுப்பிரமணியன் பேட்டி

750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதி அளித்துள்ளார். கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலை.யில் போராட்டக் குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பொங்கலுக்கு முன் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய 724 செவிலியர்களுக்கு […]

old woman issue | நால்வர் வெறிச்செயல்

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் நால்வரும் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை […]

opaneerselvam byte | ஓ.பன்னீர்செல்வம் உறுதி

இந்த தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ”திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையேற்று, பல்வேறு இயக்கங்களில் இருந்து திமுகவில் இணைகின்ற நிகழ்வு வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நிகழ்வின் முன்னேற்பாடாக பூமி பூஜை போட்டு நிகழ்வை தொடங்கியுள்ளோம். ஐந்தாண்டு கால சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதை அறிந்து, புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல […]

opposition party protest | பெயரை மாற்ற எதிர்ப்பு

100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்குவதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்’ (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் இதற்கான நிதியை பாஜக விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாநிலங்கள் குற்றம்சாட்டின. இந்நிலையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி […]

OPS Joins DMK | கடம்பூர் ராஜூ கருத்து

எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆன்மா ஒரு காலமும் ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்காது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், அதற்காக நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு. என்னுடைய அரசியல் லாபத்திற்காக திமுகவிற்கு செல்கிறேன் என்று சொன்னால் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் தான் ஓபிஎஸ். ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி நாட்டு மக்கள் இன்று […]

Orange alert districts | கனமழை கொட்டும்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு பெய்யக்கூடும்.கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். இதேபோல் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

OTT platform banned | மத்திய அரசு அதிரடி

மத்திய அரசின் விசாரணைக்குப் பிறகு பின்வரும் ஐந்து தளங்களும், அவற்றுடன் தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் செயலிகளும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன: தடைக்கான முக்கிய காரணங்கள்: அரசின் தொடர் நடவடிக்கை: கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு சிறிய அளவிலான ஓடிடி தளங்களைக் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

padayappa re release | தெறிக்கவிட்ட படையப்பா

நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, ‘படையப்பா’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் கொண்டாடிய அல்லது கொண்டாட மறந்த படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அதில் சில படங்கள் ரீ-ரிலீஸிலும் ஆதிக்கத்தை செலுத்தின. குறிப்பாக புதிய படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ரீ-ரிலீஸ் படங்களில் கொண்டாட்டங்களும் அமைந்துள்ளன. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ‘படையப்பா’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர் முன்பதிவில் மட்டும் 85 […]

Pak officer waved TN | வேவு பார்த்த பாகிஸ்தான்

தமிழகத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கின் முக்கிய திருப்பமாக, தமிழக சிறப்பு நீதிமன்றம் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்னாள் துணை தூதர் அமீர் சுபைல் சித்திக் என்பவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் அக்டோபர் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாகிஸ்தான் உளவு செயல்பாடுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணை, நாடு முழுவதும் […]

Pakistan earthquake | காலையில் நிலநடுக்கம்

வடக்கு பாகிஸ்தானில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4. ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.புர்ஹானின் வடகிழக்கில் 11 கி.மீ. தூரத்திலும், 14 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் உணரப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மாநிலத்தில் 5.9 […]

Pakistan incident | பாகிஸ்தான் சம்பவம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சந்தேக நபர் ஒருவர் மண்டபத்தில் வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார்.இதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Palamedu jallikattu | பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் முதலிடம் பிடித்த நிலையில், குலுக்கல் முறையில் அஜித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். போட்டியின் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் மற்றும் பொதும்பு பிரபாகரன் ஆகிய இருவர் 16 களைகளை அடக்கி முதலிடம் பிடித்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் முதல் பரிசு பெறும் வீரரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.இதன்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர் அஜித்துக்கு முதல் பரிசான கார் வழங்கப்பட்டது. மற்றொரு வீரர் பிரபாகரனுக்கு 2-வது பரிசான இருசக்கர வாகனம் […]
error: Content is protected !!