உண்மையின் உறைவிடம்…

அண்மை செய்திகள்44 Videos

Agri bussiness Festival | வேளாண் வணிக திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிகத் திருவிழாவை நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரித்தல், கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள், உற்பத்தியாளர்கள்- வணிகர்கள் சந்திப்பு போன்ற பல்வேறு அம்சங்களுடன், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டின் 2-வது […]

Addictive substance seized | பல கோடி ரூபாய் மதிப்பு

தொண்டி அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து தொண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் இலங்கைக்கு கடத்தி வருவதாக ராமநாதபுரம் சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற அவர்கள் தொண்டி அருகே பாசி பட்டினம் பகுதியில் பஸ்சை நிறுத்தி ஏறி சோதனை செய்துள்ளனர். அப்போது சுமார் 4 […]

Tollgate public issue | சுங்கச்சாவடியில் சம்பவம்

சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள உள்ளூர் வாகனங்கள் மற்றும் விவசாய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் – செங்கம் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் வேலை செய்யும் ஊழியர் விவசாயிகளிடம் தவறாக பேசி அட்டூழியம் செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் கடந்த 29-11-2025,சனிக்கிழமை மாலை 4.30மணி அளவில் உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலப்பாம்பாடி ஏரியில் […]

Thiruvallur crime news | மனைவி நடத்தையில் சந்தேகம்

டிரம்மில் மனைவி உடல்…ஷாக் கொடுத்த கணவன் கும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடித்து கொலை செய்து டிரம்மில் அடைத்து மண்ணில் புதைப்பு. இரண்டு மாதங்களுக்கு முன் மனைவியை கொலை செய்து புதைத்ததாக கூறிய கணவன் கைது. சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய காவல்துறையினர் தீவிரம். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் 39. பெயிண்டிங் உள்ளிட்ட கூலி தொழில் செய்து வந்த சிலம்பரசனுக்கும் பிரியா என்பவருக்கும் […]

Tamilnadu hindu religious | பாஜகவை மிஞ்சும் அறநிலையத்துறை

கடந்த 2014 முதல் இந்தியாவை ஆண்டு வரும் பாஜக, ஒரு மதவாத கட்சி என்றே பார்க்கப்படுகிறது. பாஜகவின் செயல்பாடு இந்துக்களுக்கு ஆதரவாகவும், மற்ற மதத்தினருக்கு எதிராக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் பாஜகவின் அரசியல் செயல்பாடு ஏற்று கொள்ளப்பட்டாலும் திராவிட கட்சிகள் ஆளும் தமிழகத்தில் பாஜகவின் இந்துத்துவா என்ற திட்டம் இதுவரை ஏற்று கொள்ளப்படவில்லை. இந்துக்களுக்காக மட்டுமே பாஜக செயல்பட்டு வருகிறது என்ற நிலை இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவை மிஞ்சும் அளவிற்கு தமிழ்நாடு இந்து […]

puducherry family problem | கணவன் மனைவி சண்டை

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரா மாநிலம் காக்கினாடா அருகே அமைந்துள்ளது புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம், இங்கு பல்லா தெருவில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளி பெர்மாடி நானி (30), இவரது மனைவி பெர்மாடி தேனா (26), இவர்களுக்கு 7 வயதில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உள்ளார். இந்த நிலையில் […]

90 lakhs fraud | ரூ.90 இலட்சம் மோசடி

சைதாப்பேட்டையிலுள்ள தனியார் வங்கியில் தங்க நகைகளை வேறொருவர் பெயரில் அடமானம் வைத்து ரூ.90 இலட்சம் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் வங்கி மேலாளர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, சைதாப்பேட்டை, VGP சாலையில் வசித்து வரும் சுலைமான், என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுலைமான், கிண்டி, லாயர் ஜெகநாதன் தெருவிலுள்ள Catholian Syrian Bank (CSB) வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துக் கொண்டு, அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், பணம் […]

Trichy prison dead | திருச்சி மத்திய சிறை

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார். இவருக்கு வயது 19. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. தகவலறிந்து உடனடியாக சென்ற சிறை காவலர்கள் சுபினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Chennai police action | தவறவிட்ட தாலிச்செயின்

ஐஸ்அவுஸ் பகுதியில் ஜெராக்ஸ் கடையில் தவறவிட்ட சுமார் 5 சவரன் தாலிச்செயினை போலீசார் விசாரணை செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சென்னை, ஐஸ்அவுஸ், வி.ஆர் பிள்ளை தெருவில் வேல்முருகன் என்பவர் கலைமகள் என்ற பெயரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். ஜெராக்ஸ் கடைக்கு வந்த நபர் ஒருவர் சுமார் 5 சவரன் தாலிச்செயினை தவறவிட்டு சென்றுள்ளார். தாலிச்செயினை கண்டெடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வேல்முருகன் நாணயத்துடன் D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை […]

chennai Commissioner office | குறை தீர் முகாம்

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 20 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .அருண், காவல் ஆணையரகத்தில் புகார் மனு […]

Madhavaram fake documents | பல கோடி சொத்து

சென்னை, மாதவரம் பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து இரண்டடுக்கு மாடி வீடு கட்டிய நபரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் வசித்து கொண்டு நகைப்பட்டறை நடத்தி வரும் திருமதி.பிரியங்கா, பெ/வ.30 என்பவருக்கு சொந்தமான மாதவரம் பொன்னியம்மன்மேடு, தணிகாச்சலம் நகரில் உள்ள பிளாட் எண்.138ல் உள்ள 2,134 சதுர அடி கொண்ட சுமார் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள சொத்தினை சந்திரன் மற்றும் சிலர் […]

chennai koyambedu arrest | சென்னை கோயம்பேடு கைது

கோயம்பேடு பகுதியில் வியாபாரியை பீர் பாட்டிலால் தாக்கி, பணம் பறித்த 2 முக்கிய குற்றவாளிகள் கைது. செய்யப்பட்டுள்ளனர் சென்னை, கோயம்பேடு, அண்ணா தெருவில் தங்கி முட்டை வியாபாரம் செய்து வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன்,என்பவர் அங்குள்ள கடைகளுக்கு தினந்தோறும் முட்டை சப்ளை செய்துவிட்டு பின்னர் கடைகளுக்குச் சென்று முட்டைகளுக்கான பணம் வசூல் செய்து வருகிறார். பார்த்திபன் சப்ளை செய்த கடைகளில் பணம் வசூல் செய்து கோயம்பேடு, A ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தெரிந்த […]

Coimbatore accident | மதுபோதையில் இளைஞர்கள்

கோவையில் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக வாட்டர் வாஷ் செய்வதற்காக வந்த காரை எடுத்துக்கொண்டு மதுபோதையில் பயணித்த நண்பர்கள் கார் மரத்தில் மோதியதில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திதுள்ளது. தஞ்சையை சேர்ந்த ஹரீஷ்,பிரகாஷ் மற்றும் திருச்சியை சேர்ந்த சபா ஆகிய மூவரும் கோவை பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள தனியார் வாட்டர்வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.அவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பலகலைக்கழகத்தில் தோட்டக்கலைத்துறை மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களான தஞ்சையை சேர்ந்த பிரபாகரன் மற்றும்அரியலூரை சேர்ந்த அகத்தியன் ஆகியோரும் நண்பர்களாக […]

Pazhani Mahalaya amavasai

மஹாளய அமாவாசை – புனித நீராடும் நதியின் அவல நிலை மஹாளய அமாவாசையை முன்னிட்டு பழனியில் தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் ஆற்றங்கரை சுகாதாரமற்று இருந்ததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்வது வழக்கம். அதிலும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவதை மக்கள் ஐதீகமாக கொண்டுள்ளனர். அதிலும் புராட்டசி அமாவாசை என்றால் கூடுதல் சிறப்பு உண்டு. அந்த வகையில் இன்று […]

avadi police station | உதவி கேட்ட மாணவன்

பள்ளி படிப்பை தொடர உதவிய மாணவனுக்கு பூந்தமல்லி காவல் ஆய்வாளர் உதவி செய்து சீருடைகள் மற்றும் பள்ளி புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அறிவுரை வழங்கினார். ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த ஹரிஸ் என்ற 14-வயதுடைய சிறுவன், T12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு தனது பள்ளி படிப்பை தொடர உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சிறுவனை ஆவடி சின்ன அம்மன் கோவில் அருகில் உள்ள நபி கிரசன்ட் […]

Thakkaar book launch | உள்ளதை உள்ளபடி

ஒருங்கிணைந்த குடும்ப உறவுகளின் குரலாக ஒலிக்க தொடங்கிய தக்கார்…! சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தக்கார் குரல் மாத இதழ் வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தி நாளான கடந்த 2 ஆம் தேதி நேற்று முன்தினம் நடைபெற்றது. தக்கார் குரலின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான யூசுப் பாஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பா.ஜோதிமணி, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் துணை ஆட்சியர் டீ.முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ம.வீ.ராஜதுரை, சென்னை பத்திரிக்கையாளர் […]

Tamilnadu fishermen welfare | இடித்து தள்ளப்பட்ட கூடாரம்

பனையூர் குப்பத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்த வலை பின்னும் கூடாரத்தை இடித்து தள்ளியதற்கு மீனவர் சங்கத்தின் சென்னை புறநகர் மாவட்டம் சார்பாக நன்றி தெரிவித்தனர்.. தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் திரு துரை மகேந்திரன் அவர்களின் ஆலோசனையின் படி அமைப்பு செயலாளர் பனையூர் பெ. மூர்த்தி அவர்களின் தலைமையில் சென்னை மாநகராட்சியின் 197 வது வட்ட உறுப்பினர் திருமிகு மேனகா சங்கர் அவர்களை சந்தித்து பனையூர் குப்பத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்த வலை […]

Cooperative bank issue | நகையை மீட்க நடவடிக்கை

ஈரோட்டில் கூட்டுறவு வங்கியில் 60 பவுன் நகை கையாடல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், முனிசிபல் காலனியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்கள் பலர் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று உள்ளனர். இந்த நகைகளின் இருப்பு தொடர்பாக வங்கியின் அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது 60 பவுன் நகை கையாடல் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கியின் இயக்குனர் ஜெயந்தி ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். […]

Northchennai awareness rally | பள்ளி விழிப்புணர்வு பேரணி

வடசென்னையில் போதை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் பூக்கடை பகுதியில் பள்ளி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும் பூக்கடை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சென்னையில் நாளுக்கு நாள் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையிலும், பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காகவும், பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல்லும் சிறுவர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் போதை பொருள் பயன்பாடு […]

India Squad Announced | இந்திய அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாததால் ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் விளையாடிய […]

Erode cooperative bank | தலைமறைவான டிரைவர்

8.25 கிலோ நகை கையாடல் விவகாரத்தில் நெஞ்சுவலி என நாடகமாடிய ஈரோடு கூட்டுறவு நகர வங்கி மேலாளர் தலைமறைவான டிரைவர் சிக்கினார். ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி செயல்படுகிறது. இங்கு வாடிக்கையாளர் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் தணிக்கையில் 8.25 கிலோ தங்க நகை கையாடல் செய்யப்பட்டது உறுதியானது.இது தொடர்பாக விசாரணை தொடங்கியதும் வங்கி நகை மதிப்பீட்டாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஈரோடு […]

PM Modi Speaks essentials

பிரதமர் மோடி சொன்ன குட் நியூஸ்..! நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது . வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு […]

avadi 600kg drugs | கிலோ கணக்கில் போதைபொருள்

ஆவடி காவல் ஆணைரயகத்தில் சுமார் 227 வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 603.775 கிலோ கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை அழிக்க, ஆவடி மாநகர காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்களின் உத்திரவின் படி ஆவடி மாநகர் காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K. பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., மற்றும் […]

venezuela earth quake | சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 6.2ஆக பதிவாகியுள்ளது. 7.8 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அங்கிருந்த மக்கள் உடனே வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் […]

Sarathkumar greets karthika | கார்த்திகாவுக்கு பாராட்டு

ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் கபடி விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. உலக அரங்கில் நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்த அணியில் துணை கேப்டனாக இருந்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய […]

dindugal ganja sale

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது திண்டுக்கல்லில் தொடர்ந்து இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசாரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கஞ்சா விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் துணை காவல் ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் காரமடை மருத்துவர் பூங்கா பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

collector office protest | சாலை மறியல் போராட்டம்

கிராம ஊராட்சிகளின் பணிபுரியும் உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம்,கொரோனா காலத்தில் அறிவித்துள்ள சிறப்பு ஊக்க தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புவேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ‌மாவட்ட பொது செயலாளர் சந்தானம் தலைமையில்CITU சார்பில்உள்ளாட்சிகளில் பணி புரியும்மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் […]

Postal Vote counting process | தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை

தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் எண்ணப்படும் முறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் அனைத்துச் சுற்றுகளும் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி: வாக்குப்பதிவு இயந்திரத்தின் இறுதிக்கு இரண்டு சுற்றுகளுக்கு முன்பாக, அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு தொகுதியில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை இருந்தால், […]

Thiruma Greets abinesh | தங்கம் வென்ற அபினேஷ்

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகத்தில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபினேஷை சந்தித்து விசிக தலைவர் வாழ்த்து தெரிவித்தார். அவரை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத் தொகையாக 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார், அவரது பயிற்சியாளர் புவியரசிற்கு 10 ஆயிரம் ரூபாயை வழங்கி சிறப்பித்தார். மேன்மேலும் இந்தியாவிற்கு பெருமை […]

Gold Rate Rises

உச்சம் தொட்ட தங்கம் விலை..! ஒரு சவரன் ரூ..? தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது. நேற்று மட்டும் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது நகை பிரியர்களை அதிர வைத்தது. நேற்று தங்கம் விலை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு […]

Puratchi bharatham katchi | புரட்சி பாரதம் கட்சி

திருவள்ளூர் மத்திய மாவட்டம் , மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம்.E.குட்டி மற்றும் மாவட்ட பொருளாளர் S.பார்த்திபன் அவர்கள் தலைமையில் நியமனம் செய்யப்பட்டனர். புரட்சி பாரத கட்சியில் தங்கள் பணிகளை சிறப்பாக செய்திடராமத்தண்டலம் M.புருஷோத் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது . ஒன்றிய செயலாளர் பதவி பெற்று இருக்கும் M.புருஷோத் அவர்களுக்கு புரட்சி பாரத கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பூவை M.ஜெகன் மூர்த்தியார் MLA அவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய […]

Ladakh Statehood protest | லடாக்கில் வெடித்த வன்முறை

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 4 பேர் பலியாகினர். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சியை வழங்கும் 6வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து […]

Top 10 rowdy list | டாப் 10 ரவுடி பட்டியல்

புதுச்சேரியில் டாப் 10 ரவுடி பட்டியல் உள்ள பிரபல ரவுடி அய்யனாரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் அரசன்குளம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்த செல்வத்தின் மகன் தாடி அய்யனார் (எ) ராஜதுரை புதுச்சேரி டாப் 10 ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவர். இவர் மீது 4 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு, 6 கஞ்சா வழக்கு, வழிபறி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது […]

chitfund fraud arrest | சிட்பண்டு நிறுவனத்தில் மோசடி

அரும்பாக்கம் பகுதியில் சிட்பண்டு நிறுவனம் நடத்தி ரூ.2.4 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 2 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை, கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரும்பாக்கம் பகுதியில் உள்ள அச்சலிஸ் சிட்பண்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் ரூ.2.17 லட்சம் செலுத்தியுள்ளார். சீட்டு பணம் முதிர்வடைந்த பின்னரும் மேற்படி டில்லிபாபு உட்பட சுமார் 70 பொதுமக்களிடம் பணம் ரூ.2.4 கோடிக்கு […]

ungaludan stalin scheme | உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நடைபெற்றது. இந்த முகாமில் தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் […]

ttv dinakaran cant accept | திட்டவட்டமாக தெரிவித்த டிடிவி

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன், “அரசியலில் இருப்பதால் அரசியல் மட்டும்தான் பேச வேண்டும் என்று அவசியமில்லை. நண்பர்கள் என்ற முறையில் அண்ணாமலையுடன் ஒரு மணி நேரம் பேசினேன்.அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோதுதான் எங்களை கூட்டணிக்கு கொண்டு வந்தார். தில்லியில் நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை. அண்ணாமலை மூலமாகதான் கூட்டணியில் இணைந்தோம். கூட்டணி விட்டு விலகிய பிறகும் அவரிடம் பேசிக் […]

Karur Money Theft

கார நிப்பாட்டு..! பணத்த எடு – சட்டுன்னு சிக்கிய திருடர்கள் வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி – திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது,மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன்(37), தவமணி(27), சத்யராஜ்(27) புதுக்கோட்டையை சேர்ந்த […]

Vadivelu fires youtubers

Youtubers-க்கு ஆப்பு அடிக்கணும் – வடிவேலு ஒரு 10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். அதை நடிகர் சங்கம் தடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69ஆவது பொதுக்குழு கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 21) நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசுகையில், ” நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக்கொண்டு நமது […]

Tiruvallur bday celeb | பட்டாக்கத்தியில் கொண்டாட்டம்

திருவள்ளூர் அருகே பட்டாகத்தியில் கேக் வெட்டி கையேரி பட்டாசுகளை கொளுத்தி எரிந்து பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளுர் அடுத்தகொப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ஒளி என்ற இளைஞருக்கு கடந்த 1 ம் தேதி பிறந்தநாள் அன்றைய தினம் அவரது சக நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்ற அருண்குமார், கனிஷ்கர், மேலும் 17 வயதுடைய இரு நண்பர்கள் என 5 பேர் ஒன்றாக இணைந்து தமிழ் ஒளி பிறந்த […]

Tamilisai Strongly Criticizes | திருமாவளவன் துணை முதல்வர்-ஆ?

திருமாவளவனுக்கு 6 மாதமாவது துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதியை உண்மையாகவே ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால், இந்த ஆட்சியில் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்-அமைச்சர் பதவியை திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும். ஜிஎஸ்டியால் பொருட்களின் விலை குறையுதே.. மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்களே என சந்தோஷப்படாமல், அய்யய்யோ விலை குறைஞ்சிடுச்சு.. மக்கள் இனிமேல் பாஜகவிற்கோ அதிமுகவிற்கோ ஓட்டு போட்ருவாங்களோ என இந்தியா கூட்டணியினர் […]

MA.Su speaks about vijay

எழுதி கொடுத்து பேசும் விஜய் – மா.சு நறுக் தவெக தலைவர் விஜயின் பேச்சு யாரோ எழுதி கொடுத்து படிப்பது போல் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஜமீன் தண்டத்தில் ” நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ” முகாமினை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாகை மருத்துவமனையில் பிரசவத்திற்கு மருத்துவர்கள் இல்லை என்று சொல்வது யாரோ எழுதிக் கொடுத்துப் படிப்பது போல் உள்ளது என்று […]

puzhal lake alert | புழல் ஏரி நீர்வரத்து

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி 3வது முறையாக ஏரியில் இருந்து 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வேகமாக நிரம்பியது. இன்று காலை 6மணி நிலவரப்படி 3300 மில்லியன் கன […]

Ranipet trade fair | தொழில் வர்த்தகக் கண்காட்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்,கைத்தறி மற்றும் துணிநூல் துறைஅமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ராணிப்பேட்டை சிப்காட் Premier Leather நிறுவன வளாகத்தில் ராணிப்பேட்டைமாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை(Industrial Expo) தொடங்கி வைத்தார்கள். உடன் […]

Minister sivashankar byte | உடனடியாக நடவடிக்கை..!

ஆர்கே நகர், ராயபுரம், பெரம்பூர் தொகுதிகளில் மின்வாரிய பொறியாளர்கள் பற்றாக்குறை, கேபிள் பிரச்சனைகள் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் பேட்டி யளித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி மற்றும் 3 தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் மின்வாரிய பொறியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3 தொகுதிகளில் இருக்கும் […]
error: Content is protected !!