முகப்பு 21-12-2020
அண்மை செய்திகள்
iran launches drone | ஈரானின் ட்ரோன் தாக்குதல்
துபாய் விமான நிலையம் அருகே அதிகாலையில் நடந்த டிரோன் தாக்குதால் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. சவுதி, ஓமன், பஹ்ரைன், துபாய் என அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தாளங்களை குறிவைத்து, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை யு.ஏ.இ மீது ஈரான் 1,800க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; துபாய் […]
Annamalai explains | அண்ணாமலை விளக்கம்
விஜய் தரப்போடு கூட்டணி பேச்சுவார்த்தையே நடக்கவில்லைஎன அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். பாஜக முன்னாள் மாநில அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, ‘விஜய் அவர்களுடனான கூட்டணியை பொறுத்தவரைக்கும் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக சொல்லிவிட்டார். யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி அண்ணன் சொன்னதுடன் முடிந்து விட்டதாகவே நாங்கள் பார்க்கிறோம். தவெக ஆன்லைன் மீட்டிங் நடத்தியது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கூட்டணியின் தலைவராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் வேட்பாளர் அவர்தான். அவருடையே கருத்தே […]
MK Stalin Campaigns | திக்கட்டும் உதயசூரியன்
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிட மாடலின் சாதனைகள், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள், அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி, துணிச்சல் இதுதான் தி.மு.க. என குறிப்பிட்டுள்ளார். Total Page Visits: 26 – Today Page Visits: 1
Today weather update | வானிலை மையம் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் நாளை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் […]
Karur stampede issue | தவெக விஜய் ஆஜர்
கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் மேற்கொண்ட விசாரணை நிறைவடைந்தது. இன்று விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக கரூர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வழங்கிய பதில்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தது. எனவே அதனை மையப்படுத்தி இன்று விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.விஜய்யிடம் […]





