உண்மையின் உறைவிடம்…

மாவட்ட செய்திகள்15 Videos

MA.Su speaks about vijay

எழுதி கொடுத்து பேசும் விஜய் – மா.சு நறுக் தவெக தலைவர் விஜயின் பேச்சு யாரோ எழுதி கொடுத்து படிப்பது போல் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஜமீன் தண்டத்தில் ” நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ” முகாமினை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாகை மருத்துவமனையில் பிரசவத்திற்கு மருத்துவர்கள் இல்லை என்று சொல்வது யாரோ எழுதிக் கொடுத்துப் படிப்பது போல் உள்ளது என்று […]

puducherry family problem | கணவன் மனைவி சண்டை

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரா மாநிலம் காக்கினாடா அருகே அமைந்துள்ளது புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம், இங்கு பல்லா தெருவில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளி பெர்மாடி நானி (30), இவரது மனைவி பெர்மாடி தேனா (26), இவர்களுக்கு 7 வயதில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உள்ளார். இந்த நிலையில் […]

Pazhani Mahalaya amavasai

மஹாளய அமாவாசை – புனித நீராடும் நதியின் அவல நிலை மஹாளய அமாவாசையை முன்னிட்டு பழனியில் தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் ஆற்றங்கரை சுகாதாரமற்று இருந்ததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்வது வழக்கம். அதிலும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவதை மக்கள் ஐதீகமாக கொண்டுள்ளனர். அதிலும் புராட்டசி அமாவாசை என்றால் கூடுதல் சிறப்பு உண்டு. அந்த வகையில் இன்று […]

avadi police station | உதவி கேட்ட மாணவன்

பள்ளி படிப்பை தொடர உதவிய மாணவனுக்கு பூந்தமல்லி காவல் ஆய்வாளர் உதவி செய்து சீருடைகள் மற்றும் பள்ளி புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அறிவுரை வழங்கினார். ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த ஹரிஸ் என்ற 14-வயதுடைய சிறுவன், T12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு தனது பள்ளி படிப்பை தொடர உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சிறுவனை ஆவடி சின்ன அம்மன் கோவில் அருகில் உள்ள நபி கிரசன்ட் […]

Cooperative bank issue | நகையை மீட்க நடவடிக்கை

ஈரோட்டில் கூட்டுறவு வங்கியில் 60 பவுன் நகை கையாடல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், முனிசிபல் காலனியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்கள் பலர் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று உள்ளனர். இந்த நகைகளின் இருப்பு தொடர்பாக வங்கியின் அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது 60 பவுன் நகை கையாடல் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கியின் இயக்குனர் ஜெயந்தி ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். […]

Northchennai awareness rally | பள்ளி விழிப்புணர்வு பேரணி

வடசென்னையில் போதை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் பூக்கடை பகுதியில் பள்ளி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும் பூக்கடை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சென்னையில் நாளுக்கு நாள் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையிலும், பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காகவும், பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல்லும் சிறுவர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் போதை பொருள் பயன்பாடு […]

dindugal ganja sale

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது திண்டுக்கல்லில் தொடர்ந்து இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசாரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கஞ்சா விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் துணை காவல் ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் காரமடை மருத்துவர் பூங்கா பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

avadi 600kg drugs | கிலோ கணக்கில் போதைபொருள்

ஆவடி காவல் ஆணைரயகத்தில் சுமார் 227 வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 603.775 கிலோ கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை அழிக்க, ஆவடி மாநகர காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்களின் உத்திரவின் படி ஆவடி மாநகர் காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K. பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., மற்றும் […]

Chennai police action | தவறவிட்ட தாலிச்செயின்

ஐஸ்அவுஸ் பகுதியில் ஜெராக்ஸ் கடையில் தவறவிட்ட சுமார் 5 சவரன் தாலிச்செயினை போலீசார் விசாரணை செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சென்னை, ஐஸ்அவுஸ், வி.ஆர் பிள்ளை தெருவில் வேல்முருகன் என்பவர் கலைமகள் என்ற பெயரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். ஜெராக்ஸ் கடைக்கு வந்த நபர் ஒருவர் சுமார் 5 சவரன் தாலிச்செயினை தவறவிட்டு சென்றுள்ளார். தாலிச்செயினை கண்டெடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வேல்முருகன் நாணயத்துடன் D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை […]

collector office protest | சாலை மறியல் போராட்டம்

கிராம ஊராட்சிகளின் பணிபுரியும் உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம்,கொரோனா காலத்தில் அறிவித்துள்ள சிறப்பு ஊக்க தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புவேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ‌மாவட்ட பொது செயலாளர் சந்தானம் தலைமையில்CITU சார்பில்உள்ளாட்சிகளில் பணி புரியும்மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் […]

Puratchi bharatham katchi | புரட்சி பாரதம் கட்சி

திருவள்ளூர் மத்திய மாவட்டம் , மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம்.E.குட்டி மற்றும் மாவட்ட பொருளாளர் S.பார்த்திபன் அவர்கள் தலைமையில் நியமனம் செய்யப்பட்டனர். புரட்சி பாரத கட்சியில் தங்கள் பணிகளை சிறப்பாக செய்திடராமத்தண்டலம் M.புருஷோத் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது . ஒன்றிய செயலாளர் பதவி பெற்று இருக்கும் M.புருஷோத் அவர்களுக்கு புரட்சி பாரத கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பூவை M.ஜெகன் மூர்த்தியார் MLA அவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய […]

ungaludan stalin scheme | உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நடைபெற்றது. இந்த முகாமில் தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் […]

Ranipet trade fair | தொழில் வர்த்தகக் கண்காட்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்,கைத்தறி மற்றும் துணிநூல் துறைஅமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ராணிப்பேட்டை சிப்காட் Premier Leather நிறுவன வளாகத்தில் ராணிப்பேட்டைமாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை(Industrial Expo) தொடங்கி வைத்தார்கள். உடன் […]

Coimbatore accident | மதுபோதையில் இளைஞர்கள்

கோவையில் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக வாட்டர் வாஷ் செய்வதற்காக வந்த காரை எடுத்துக்கொண்டு மதுபோதையில் பயணித்த நண்பர்கள் கார் மரத்தில் மோதியதில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திதுள்ளது. தஞ்சையை சேர்ந்த ஹரீஷ்,பிரகாஷ் மற்றும் திருச்சியை சேர்ந்த சபா ஆகிய மூவரும் கோவை பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள தனியார் வாட்டர்வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.அவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பலகலைக்கழகத்தில் தோட்டக்கலைத்துறை மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களான தஞ்சையை சேர்ந்த பிரபாகரன் மற்றும்அரியலூரை சேர்ந்த அகத்தியன் ஆகியோரும் நண்பர்களாக […]

Erode cooperative bank | தலைமறைவான டிரைவர்

8.25 கிலோ நகை கையாடல் விவகாரத்தில் நெஞ்சுவலி என நாடகமாடிய ஈரோடு கூட்டுறவு நகர வங்கி மேலாளர் தலைமறைவான டிரைவர் சிக்கினார். ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி செயல்படுகிறது. இங்கு வாடிக்கையாளர் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் தணிக்கையில் 8.25 கிலோ தங்க நகை கையாடல் செய்யப்பட்டது உறுதியானது.இது தொடர்பாக விசாரணை தொடங்கியதும் வங்கி நகை மதிப்பீட்டாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஈரோடு […]
error: Content is protected !!